பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமை மனிதர்கள் மிருகங்களாக மாறிக் கொண்டிருந் இப்படிச் சொல்வது கூடத் தவறுதான்; மனிதர்களுக் குன்ளே நித்தியமாய் நிரந்தரமாய் வைகும் மிருக சுபாவம்குலம், குனம், கல்வி, தர்ம நியாய உணர்வுகள், சமூகக் கட்டுப்பாடு, நாகரிகம், சட்ட பயம் முதலிய வேலிகளினால் ஒடுக்கம்பெற்று, உள்ளத்தினுள்ளேயே பதுங்கிக் கிடக்கும் இயல்பு- இப்பொழுது கட்டறுத்துக் கொண்டு துள்ளி எழுத்தது; குதித்துக் கும்மாளியிடத் தொடங்கியது; தன்னிச்சையாக வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. இதுவே கண்ணுக்குப் புலனாகும் உண்மையாக ஊர் பூராவும் பரவி நின்றது. - முந்திய தினம் வரை - ஏன் உணர்ச்சிகள் குமுறிக் கொதித்துச் சூறையாகச் சுழன்று பின்வெறித் தீயாக வெடிப் 2தற்கு ஒரு கணத்துக்கு முந்திகூட- நன்றாக இருந்தவர்கள்’ திடீரென்று தங்களை மறந்தார்கள். உறவையும் ஊரையும் மறந்தார்கள். இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் உறைந்தார்கள். நிகழ் காலத்திலே எவ்வளவு தீமை புரியமுடியுமோ- எத்தனை எத்தனை கொடுமைகள் இயற்ற முடியுமோ- என்ன என்ன அட்டூழியங்கள் செய்ய முடியுமோ, அத்தனையையும்- அனைத்தையும் உடனடி யாகச் செய்தே தீர்ப்பது என்று துணிந்தவர்களாய், வெறியர் களாய், பித்தராய், பேயராய் சுழன்று கொண்டிருந்தார்கள் அந்த ஊர் மக்களில் ஒரு பகுதியினர். - அந்த ஊர்- அதன் பெயர் நமக்குக் தேவை இல்லை. வெறி நிலைக்கு முறுகிவிட்ட அகச் சக்திகளும், அவற்றுக்கு