பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இராவணனின் இரண்டாம் மனைவியாகிய தான்ய மாலி என்பவள். கூறி அவனை அழைத்துச் சென்றதாகவும் வால்மீகி கூறுகிறார். கம்பரிடம் இம்மாதிரியான செய்திகளைக் ðበ「6ööዥ வியலாது. அவர், தரக் குறைவான செய்திகளையும் சிறிது நாகரிகப்படுத்திக் கூறுவார். அரக்கியர்களை வால்மீகி மட்டப்படுத்திய அளவு கம்பர் செய்யவில்லை. சுரங்கம் : கம்பரின் சுந்தர காண்டம் ஒரு பெரிய சுரங்கம். அதில் புகுந்து மேலும் மேலும் அகழ்ந்து வைரமும் பொன்னும் வாரிக்கொண்டு வருவதென்பது எளிய செயல் அன்று. ஏதோ இயன்ற வரை இச் சுரங்கத்திலிருத்து பதினாறு வகைப் பொருள்கள் அகழ்ந்தெடுத்துத் தரப்பட்டுள்ளன. இனிச் சுரங்கப் பொருள்களை - ஒவ்வொன்றாகத், தொடர்ந்து காண்பாம்.