பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. உவமை-உருவகங்கள் ஒப்புமைக்கலை நன்கு தெரியாத ஒன்றை விளக்குவதற்கு நன்கு தெரிந்த ஒன்றை அதுபோல் இது என்று எடுத்துக் காட்டுவது உவமை- ஒப்புமை எனப்படும். இந்த ஒப்புமை ஒர் இயற்கைக் கலையாகும். புலவர்கள் மட்டுமா-கல்வி யறிவில்லாத பொது மக்களும்- எளிய மக்களும் பேசும் போது ஒப்புமை கூறுவது வழக்கம். எனவே இது மக்கள் கலையுமாகும். ஓர் ஒப்புமையும் சொல்ல வராவிடினும், என்னமோ சொல்லுவாங்களே அதுபோல --என்றாவது இனம் தெரியாத ஒப்புமை கூறப்படும். இவ்வாறு ஒப்புமை காட்டுவது தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல்’ என்னும் உளவியல் முறையுமாகும். ஒருவரின் முகமலர்ச்சியை விளக்குவதற்குத் தாமரை போல் அவர் முகம் மலர்ந்திருந்தது என்று கூறுவது உவமை- ஒப்புமையாகும். இதையே சுருக்கித் தாமரை முகம் எனலாம். தாமரை முகம் என்பதையே திருப்பிப் போட்டு முகத் தாமரை என்று கூறுவது உருவகமாகும். தாமரை முகம் என்பதில் தாமரை- முகம் என இரு பொருள்கள் சுட்டப்படுகின்றன. முகத்தாமரை என்பதில் இரு பொருள்கள் இல்லை; முகமாகிய தாமரைடமுகமே தாமரை என முகத்தையே தாமரையாக்கிக் காட்டுவது உருவகம் எனப்படும். உவமை ஆங்கிலத்தில் "Sumile. என்றும், உருவகம் Metaphor என்றும் வழங்கப் பெறும்"