பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூறாவளி 11

     என் நூலைச் சிலர் இரண்டு முறை-மூன்றுமுறை படித்த தாகச் சொல்கின்றனர். நேரிலும் கடிதம் வாயிலாகவும் பாராட்டுகள் மிகுதி. நூல்கள் வங்கியபின், என் கையெழுத் தைப் போடச் சொல்லிப் பெற்றுச் செல்கின்றனர் சிலர். இவர்களுள் ஏதோ ஒர் ஊர்த் தலைமை நீதிபதியும் ஒருவர். இதற்குக் காரணம், யான் தந்துள்ள நுட்பமான - அரிய ஆய்வுக் கருத்துகளே யாகும். அவ்வளவு கருத்துகளுள் ஒன் றையும் தொடாமல், மட்டமான மதிப்புரையாளர், பட்டி மண்டபம் பற்றி மட்டும் எடுத்துக் கொண்டார்; பட்டி மண்டபம் பேச்சாளர் பலர்க்குப் பணம் தருகிறது என யான் எழுதியிருப்பதைக் குறையாகவும் குத்தலாகவும் குறிப்பிட்டுள்ளார். தெய்வமே! இதுதானா மூளைக்கு எட்ட வேண்டும்? பட்டி மண்டபம் பற்றி இலக்கியங்களும் கூறி யுள்ளன என்று நான் எடுத்துக் காட்டியுள்ளேனே. பட்டி மண்டபத்தைச் சிலர் சாடினாலும், நான் மறுக்கவில்லையே, நானே பல பட்டி மண்டபங்களில் பேசியுள்ளேன்; இரு குழுக்களுள் ஒரு குழுவுக்குத் தலைவனாயிருந்திருக்கிறேன்; இரு குழுக்களுக்கும் மேற்பட்ட நடுவண் தலைவனாகவும் இருந்திருக்கிறேன் - பணமும் பெற்றிருக்கிறேன். பல பட்டி மண்டபங்களை யானே தொடங்கி நடக்கச் செய்தும் இருக்கிறேன். இதிலிருந்து, குற்றமே காணும் மதிப்புரை யாளரின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

திருட்டுக்கு உடந்தையா?

    மதிப்புரையாளர், யான் எழுதியுள்ள ஒரு செய்தியைத் தவறாகப் புரிந்துகொண்டு என்னை மிகவும் மட்டப்படுத்தி எழுதியிருப்பதன் வாயிலாகத் தம்மை மிகவும் மட்டப் படுத்திக் கொண்டார். யான் இதை எழுதின், அவர் இனி எழுதுகோல் எடுக்கத் தகுதியுடையவரல்லர் என அவரது அறியாமைக்கு இரக்கப்பட நேரிடும். இருப்பினும் தெரிவித்து