பக்கம்:சுயம்வரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

99



“'ஒ, அதைச் சொல்கிறாயா அதற்காக நீ கவலைப்படாதே; பிறருக்கு நன்மை விளையுமென்றால் ஒரு பொய் என்ன, ஒராயிரம் பொய்கள் வேண்டுமானாலும் சொல்லலாமாம்!”

“எப்படியோ உங்களைக் கொண்டு வந்து இங்கே சேர்த்துவிட்டேன் நான். இனி அவள் பாடு, உங்கள் பாடு. நான் வரட்டுமா?" என்று அவள் திரும்பினாள்.

'அதற்குள் உன்னை விட்டு விடுவேனா, நான்' என்றான் அவன்.

அவள் திரும்பி, '“விடாமல் என்ன செய்யப் போகிறீர்கள்?”' என்றாள்.

'“இன்னும் ஒரே ஒரு நாள் மதனாவை நீ இங்கே வைத்திருக்க வேண்டும்.”'

மாதவன் இப்படிச் சொன்னதுதான் தாமதம், அருணாவுக்குப் பின்னாலிருந்த மதனா சட்டென்று அவனுக்கு முன்னால் வந்து நின்று, “அதெல்லாம் முடியாது. இன்னும் ஒரே ஒரு நாள் என்ன, ஒரே ஒரு மணி நேரம்கூட நான் இங்கே இருக்க மாட்டேன்; இருந்தால் எனக்குப் பைத்தியம்தான் பிடிக்கும்'” என்றாள் தீர்மானமாக.

'“ரொம்ப நல்லதாச்சே, அது அந்த நிலைக்கு நீ வந்து விட்டால் எந்தக் கவலையும் உன்னைப் பாதிக்காது. இஷ்டத்துக்கு எதையாவது பேசிக்கொண்டு, இஷ்டத்துக்கு யார் தலையிலாவது கல்லைத் தூக்கிப் போட்டுக்கொண்டு...”'

அவன் முடிக்கவில்லை; '“யார் தலையிலாவது என்ன, உங்கள் தலையிலேயே கல்லைத் தூக்கிப் போட்டாலும் போட்டுவிடுவேன்; அந்த அளவுக்கு என் மூளை இப்போது குழம்பிப் போயிருக்கிறது”' என்றாள் அவள்.

'“செய்; கலியாணத்துக்குப் பிறகு ஒரு மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமையல்லவா அது”'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/102&oldid=1384725" இலிருந்து மீள்விக்கப்பட்டது