பக்கம்:சுயம்வரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

43


கையுமாக நீலா பாய்ந்து வந்து அவன் காலடியில் விழுந்தாள். "தீர்க்க சுமங்கலீ பவ!" என்று அவளை வயிற்றெரிச்சலோடு வாழ்த்திக்கொண்டே, அவன் அவளைத் தூக்கிவிடுவதற்காகக் கீழே குனிந்தபோது, "ஐயோ, பெண்ணே போடின்னு சும்மா ஒரு தள்ளுத் தள்ளி விட்டா, இப்படியா போய் அவர் காலிலே விழுந்து அதற்குள்ளே, ஆசீர்வாதம் பண்ணிக்குவே?' என்று அவள் அம்மா வழக்கம்போல் கதவிடுக்கில் நின்று முகவாய்க் கட்டையின் மேல் கையை வைத்தாள். 'போம்மா, என்னைப் பிடிச்சு ஒரே தள்ளாத் தள்ளிட்டு உஊஉஊ...' என்று கண்ணைக் கசக்கிக்கொண்டே அவசரம் அவசரமாக எழுந்து, அவளுக்கு எதிரே அரக்கப்பரக்க வந்து நின்றாள் அவளுடைய அருமைமகள் நீலா.

'“அடி, என் கண்ணே! அழும்போதுகூட நீ எவ்வளவு அழகாயிருக்கேடி!'” என்று அவள் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் வழித்து நெட்டி முறித்தாள் அம்மா.

“போதாது மாமி, அவள் அழகுக்கு அது போதவே போதாது. அவளை உள்ளே அழைத்துக்கொண்டு போய் இன்னும் ஏதாவது நல்ல திருஷ்டியாகக் கழித்துப் போடுங்கள்!'” என்றான் மாதவன்.

அதைக் கேட்டுச் சற்றே முகம் சிவந்த மாமி, '“அதிருக்கட்டும், லட்டு எப்படி இருக்கு?'” என்று தன் பேச்சை மாற்றினாள்.

'“அதை ஏன் கேட்கிறீங்க போங்க, யாருக்கோ பட்டு மாமின்னு பேர் வைத்திருக்கிறார்களாமே, அந்த மாதிரி உங்களுக்கு லட்டு மாமின்னே பேர் வைத்துவிடலாம் போல இருக்கு'” என்றான் மாதவன்.

“நான் ஒண்னும் அதைப் பிடிக்கல்லே, இவதான் உங்களுக்காகப் பிடித்து வைத்தாளாக்கும்”" என்றாள் அவள் தன் பெண்ணைச் சுட்டிக்காட்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/46&oldid=1384926" இலிருந்து மீள்விக்கப்பட்டது