52
சுயம்வரம்
"எதற்கு?"
"உன்னை மறப்பதற்காக அதையாவது காபியில் கலந்து குடித்து உயிரை விடுவதற்கு!"
"அட, கடவுளே! என்னைக் கேட்டிருந்தால் எங்கிருந்தாவது கொஞ்சம் வாங்கிக் கொடுத்திருப்பேனே!"
"பாவம், உன்னைக் காதலிப்பதற்காக நீ அவருக்குத் தர நினைக்கும் 'காதல் பரிசு' அதுதானா?"
"ஆமாம்; அவனால் எனக்கு ஏற்படும் தொல்லை இன்னொருத்திக்காவது ஏற்படாமல் இருக்குமல்லவா?"
"அவர் உன்னைத் தவிர வேறு யாரையும் காதலிப்பதில்லை ; அது எனக்குத் தெரியும்!" என்று அடித்துச் சொன்னாள் அருணா.
"ஏமாந்தால் அவன் உன்னை மட்டுமல்ல, இந்த உலகத்திலுள்ள அத்தனை பெண்களையுமே காதலிப்பான்; அது எனக்குத் தெரியும்!" என்று மதனாவும் பதிலுக்கு அடித்துச் சொன்னாள்.
"யாரை நம்ப வேண்டுமோ, அவரை நம்பமாட்டாய்; எவனை நம்பவேண்டாமோ அவனை நம்புவாய். நீ வாடியம்மா, உள்ளே போவோம்" என்றாள் அருணா, அவளைக் கொஞ்சம் விட்டுப் பிடிப்பதற்காக.
"ஆமாம், அவர் நீலாவுடன் சினிமாவுக்குப் போயிருப்பது உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றாள் மதனா, அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றுகொண்டே.
"ஆனந்தன்தான் சொன்னார்; முதலில் நான் அதை நம்பவேயில்லை. 'நீ வேண்டுமானால் போய்ப் பார்!' என்றார்; 'எதற்கும் போய்த்தான் பார்ப்போமே?' என்று போனால், அங்கே அவர் சொன்னபடியே அவன் ‘ஜாம், ஜாம்' என்று