பக்கம்:சுயம்வரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சுயம்வரம்


"எதற்கு?"

"உன்னை மறப்பதற்காக அதையாவது காபியில் கலந்து குடித்து உயிரை விடுவதற்கு!"

"அட, கடவுளே! என்னைக் கேட்டிருந்தால் எங்கிருந்தாவது கொஞ்சம் வாங்கிக் கொடுத்திருப்பேனே!"

"பாவம், உன்னைக் காதலிப்பதற்காக நீ அவருக்குத் தர நினைக்கும் 'காதல் பரிசு' அதுதானா?"

"ஆமாம்; அவனால் எனக்கு ஏற்படும் தொல்லை இன்னொருத்திக்காவது ஏற்படாமல் இருக்குமல்லவா?"

"அவர் உன்னைத் தவிர வேறு யாரையும் காதலிப்பதில்லை ; அது எனக்குத் தெரியும்!" என்று அடித்துச் சொன்னாள் அருணா.

"ஏமாந்தால் அவன் உன்னை மட்டுமல்ல, இந்த உலகத்திலுள்ள அத்தனை பெண்களையுமே காதலிப்பான்; அது எனக்குத் தெரியும்!" என்று மதனாவும் பதிலுக்கு அடித்துச் சொன்னாள்.

"யாரை நம்ப வேண்டுமோ, அவரை நம்பமாட்டாய்; எவனை நம்பவேண்டாமோ அவனை நம்புவாய். நீ வாடியம்மா, உள்ளே போவோம்" என்றாள் அருணா, அவளைக் கொஞ்சம் விட்டுப் பிடிப்பதற்காக.

"ஆமாம், அவர் நீலாவுடன் சினிமாவுக்குப் போயிருப்பது உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றாள் மதனா, அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றுகொண்டே.

"ஆனந்தன்தான் சொன்னார்; முதலில் நான் அதை நம்பவேயில்லை. 'நீ வேண்டுமானால் போய்ப் பார்!' என்றார்; 'எதற்கும் போய்த்தான் பார்ப்போமே?' என்று போனால், அங்கே அவர் சொன்னபடியே அவன் ‘ஜாம், ஜாம்' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/55&oldid=1384669" இலிருந்து மீள்விக்கப்பட்டது