பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 83

இன்பம்

எப்படியும் ஏழ்மைநிலை மாற வேண்டும்
இல்லாவிட் டால்உடனே மாற்ற வேண்டும்
அப்போது தான்நாட்டில் வாழும் மாந்தர்
அனைவர்க்குமேஇன்பம் கிடைக்கும்.........

-இதழ்: காவியம் (10.2-56)


கொட்டைகைக்குத் தீவைத்தல்; குறும்பு செய்தல்,
குடிகெடித்தல் அத்தனையும் துன்பம் திட்டும்
அட்டவணை என்பதனை அறிக தீமை
அணுகாத நிகழ்ச்சிகளே இன்பம் என்க.


- (13-1968-ல் சென்னை வானொலியில் 'இன்னாசெய்யாமை' என்ற தலைப்பில் பாடிய கவிதை)


துன்பங்கள் சுருக்கென்று தைப்ப தாலே,
துன்பத்தை ஊசியுடன் ஒப்பிட் டார்கள்.
இன்' என்றால் இன்பத்தைக் குறிக்கும் அந்த
இன்பந்தான் உலகத்தை ஒன்று சேர்க்கும்.

- (13-4-1968 - ல் சென்னை வானொலியில் ‘இன்னா செய்யாமை’ என்ற தலைப்பில் பாடிய கவிதை)