இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள்
துன்பம்
வாயை விட்டு வெளிவரும் வார்த்தையை மறுபடி விழுங்கவா முடியும் ஓர் ஆயிரம் தடவை அழுது புலம்பினும் அதனால் துயரமா குறையும்.
தென்' என்றால் தென்திசையைக் குறிக்கும்;
மேலும் தென்னையெனும் மரத்தினையும் சுட்டிக் காட்டும்.
துன்’ என்றால் துணிதைக்கும் ஊசி யாகும்
துன்பமெலாம் ஊசிமுனை போலே குத்தும்.
(13-1968-ல் சென்னை வானொலியில்
- இன்னா செய்யாமை என்ற தலைப்பில் பாடிய கவிதை)
உருண்டோடிக் கொண்டிருக்கும் கூழாங் கல்லில்
ஒருபோதும் பாசிவந்து படிவ தில்லை.
வரவுக்குத் தக்கபடி செலவு செய்து
வருவோரைத் துன்பங்கள் தொடுவ தில்லை.
திண்டாட வைப்பதுவும் துன்பம்; நம்மைத்
தெருவோரம் நிறுத்துவதும் துன்ப மாகும்.
கண்ணிரும் தண்ணிரும் ஒன்றா னாலும்
கண்ணிரே, துன்பத்தில் ஊஞ்ச லாகும்.