உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

99


அரியசெயல் செயாவிடினும் காலப் போக்கை
அனுசரித்து நடந்துகொள்ளத் தெரிந்து கொண்டால்
உரியபயன் நிச்சயமாய்க் கிட்டும். இன்றேல்
ஒவ்வொருநா ளுந்துன்பம் கதவைத் தட்டும்.


வெடுக்கென்று நிலைமாறும் துன்பம் தொட்டால்
        விழிக்கென்றோர் புதியமழைப் பருவம் தோன்றும்.
குடைக்காம்பே போல் வாழ்வும் தலைகீ ழாகும்.
        குறிலோசை நெடிலாகி மேலும் நீளும்.


கண்ணீர்

தூங்கும் பாளையின் தொண்டையி லிருந்து
வடிவது கள்ளாம். வருத்தமும் கவலையும்
ஒன்று சேர்ந்தே உருட்டித் தள்ளிடும்
கற்களே உப்புக் கண்ணீர்த் துளிகளாம்.


தூங்கும் பாளையின் தொண்டையி லிருந்து
வடிவது கள்ளாம்! வருத்தமும் கவலையும்
உறுத்தும் இமைகளை ஒதுக்கிக் கொண்டு,
கசிந்து வருவதே கண்ணீர் வெள்ளமாம்!