பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓராண்டுக் காலத்திற்கு மேல் வாரந்தோறும் ஆனந்தவிகடனில் உவமைக் கவிஞரின் கவிதை கள் வெளிவந்தன. விகடனில் மற்றவற்றைவிட இவரது கவிதைக்கே அதிக அளவில் கடிதங் கள் வந்து குவிந்தது சிறப்புக்குறியதாகும். பாவேந்தரைத் தொடர்ந்து 1966-ல் தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தின் தலைவராக இருந்து செயல்பட்டார். மீண்டும் இருபதாண்டுக் காலத்திற்குப் பிறகு தவைராகத் தேர்ந்தெடுக் கப்பட்டு பல்வேறு நல்லதிட்டங்களை செயல் படுத்தினார். 1972-ல் தமிழக அரசு உவமைக்கவிஞருக்கு "கலைமாமணி" பட்டம் வழங்கியது. 1978-ல் எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு முதன் முதலில் ஏற்படுத்திய "பாவேந்தர் பாரதிதாசன் விருது" (ரூ 10,000 தொகை-4 பவுன் தங்கப் பதக்கம்) உவமைக் கவிஞருக்கு வழங்கி தமிழக அரசு பெருமையடைந்தது. 1980-82-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியாவுக்கு இருமுறை நீண்டகாலசுற்றுப்பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். 1982-ல் உவமைக்கவிஞரின் அறுபது வயது நிறைவையொட்டி தமிழக நிதியமைச்சர் டாக்டர் நாவலர் தலைமையில் கவிஞர் சுரதா மணிவிழா” நடைபெற்றது. இலக்கிப் அன்பர்