பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள் கவிஞருக்கு திரட்டிய நிதி ரூ.60,000 அந்த விழாவில் உவமைக் கவிஞருக்கு வழங்கப் பட்டது. விழாக்குழுவின் சார்பில் மணிவிழா மலரும் வெளியிடப்பட்டது.

1982-ல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர் களின் மடத்தில் பாரி வள்ளல் விழாவின் போது "கவியரசர்" பட்டமும் தங்கப் பதக்கமும் உவமைக் கவிஞருக்கு வழங்கப் பட்டது.

1987-ல் மலேசியாவில் நடைபெற்ற 6வது உலகத்தமிழ் மாநாட்டில் சிறப்பு விருந்தின ராக அழைக்கப்பட்டு பங்குகொண்டு உரையாற்றினார். அப்போது "உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை" அங்கு அமைக்கப்பட்டது. உலகின் பல நாடுகளில் உள்ள தமிழ்க் கவிஞர்கள் பலரும் கூடி அதன் தலைவராக உவமைக் கவிஞரைத் தேர்ந்தெடுத்தனர்.

1989-ல் அரபுநாடுகளில் ஒன்றான "சார்ஜா" வுக்கு உவமைக் கவிஞர் சுற்றுப் பயணம் செய்து அங்கு பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்.

பாவேந்தர் நூற்றாண்டான 1990-ல் டாக்டர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசின் சார்பாக முதன் முதலாக ஏற்படுத்தப்பட்ட கலைத் துறை வித்தகருக்கான பாரதிதாசன்