பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் of

கருத்துக்கள்

திறமை முதலில் பிறந்தால்தான் புகழ் பிறகு பிறக்கும். ,

-சுரதா

மீனைப்போல் வளையவும், நெளியவும் தெரியாத மனிதன் வாழவே முடிவதில்லை.

-சுரதா

வாழ்க்கைக்குக் காதல்தான் துறைமுகம்.

- சுரதா

வாழ்க்கை என்பது துக்கம் என்றால் காதல் என்பது கனவு.

t - சுரதா

எதையாவது பெறவேண்டும் என்று - துடிப்பது ஆசை எதையாவது தரவேண்டும் என்று எண்ணுவது தியாகம்.

- சுரதா

சுவர்மீதில் ஒட்டிக்கொண்டிருக்கும் வெள்ளைச் சுண்ணாம்புப் போன்றதுதான் பதவியாகும்.

- _சுரதா