இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள் 6
நல்லவர்தம் நட்பெனவே வளரும் . சில
நாளிலதன் ஈரவுடல் தளரும் - இன்பச் சொல்லமுதப் பாவலரைத் -
துண்டிவிட்டுக் கொண்டிருக்கும் சோதி . வான் . ஊர்தி!
ஆசைகொண்டு விண்வெளியின் மீது - மதி
ஆடையின்றி யேஉலவும் மாது முகில்
ஒசைகொண்ட மண்டலத்தில்
ஊர்ந்துலவி வாழ்ந்துவரும்
ஊமை வெள்ளி ஆமை! நோய் வராமல் இளைக்கும் வெண்ணிலா - இரவு நேரந் தனை வெளுக்கும் வெண்ணிலா தாய் உள்ளம் போல் குளிர்ந்த வெண்ணிலா - வெள்ளித் தட்டுபோல அமைந்த வெண்ணிலா,
தென்றல்
அலைகொண்ட நீரிணை ஆறுகள் விரிக்கும்: மணிகொண்ட தோகையை மாமயில் விரிக்கும்: வளர்தென்றல் பூக்களின் வாடையை விரிக்கும்!