இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாகவிதைகள் 11
ஆறுகள் அனைத்தையும் அலைகடல் கூப்பிடும் உப்பை மட்டுமே ஓயாமல் சாப்பிடும்.
நெடுங்கடல் என்பது நெய்தல் நிலத்தின் ஒரத்தைக் குறிக்கும் உப்புநீர் விளம்பரம்
-இதழ்: சுரதா (1-12-1970)
தள்ளிக்கொள் என்பதெல்லாம் மனிதன் சட்டம்! தழுவிக்கொள் என்பதுதான் கடலின் சட்டம்!
* * *
வரையாத ஓவியமே தடாகத் தன்னில்
வளராத தாமரையே! நிலமும் நீரும் பிரியாத புணர்ச்சியுடன் இருப்ப தாலே
பெருங்கடலைப்புணரியென்றார்............
* * *
இரவல் நிறத்தை எங்கோ வாங்கி இருண்ட கடலெனப் பெயர்பெற் றிருக்கும் போலிக் கடலோ வேலியில் லாதது: நிலத்தை விழுங்க நினைக்கும் நீர்நிலை!
* * *
அந்தக் காலத்து அரசன், பற்பல மாதரைத் தழுவி மகிழ்ந்தாற் போல, வளைந்தும் நெளிந்தும் வருகின்ற பற்பல நதிகளைப் புணரும் தண்ணிர் நாயகன்.
* * *