உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சுரதா கவிதைகள்



நிறைந்தநாள் நிலவே! பூவே
        நின்அங்கம் கட்டித் தங்கம்
குறுத்தொகைப் பற்கள், முத்தின்
        குவியல்தான்; நெளிந்து நின்று
நிறந்தரும் கரிய கூந்தல்
        நெடுந்தொகைச் செல்வ மன்றோ

–இதழ் : முக்கனி
–(1963–பொங்கல் மலர்)


அச்சமும்மச்சமும்

மறுவென்றால் களங்கம்; மருவென்றால் மச்சம்;
மறுவென்னும் களங்கம் மதியில் இருக்கும்.
மாந்தரின் உடம்பில் மச்சம் இருக்கும்.
அச்சம், உள்ளத்தின் அதிர்ச்சி யாகும்.
மச்சம், அழகின் அடையாள மாகும்.
–இதழ் : ‘சுரதா’ (1–4–1969)

நாகரிகம்

மேகங்கள் இல்லையென்றால் மழையே இல்லை
        மேலோர்கள் இல்லையென்றால் ஒழுக்க மில்லை.
நாகங்கள் இல்லையென்றால் மகுடி இல்லை.
        நாகரிகம் இல்லையென்றால் பெருமை இல்லை.