பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 சுரதாகவிதைகள்

நிறைந்தநாள் நிலவே! பூவே

தின்அங்கம் கட்டித் தங்கம் குறுத்தொகைப் பற்கள், முத்தின்

குவியல்தான்; நெளிந்து நின்று நிறந்தரும் கரிய கூந்தல்

நெடுந்தொகைச் செல்வ மன்றோ

-இதழ்: முக்கனி

- (1953 - பொங்கல் மலர்)

அச்சமும்மச்சமும்

மறுவென்றால் களங்கம், மருவென்றால் மச்சம்; மறுவென்னும் களங்கம் மதியில் இருக்கும். மாந்தரின் உடம்பில் மச்சம் இருக்கும். அச்சம், உள்ளத்தின் அதிர்ச்சி பாகும். மச்சம், அழகின் அடையாள மாகும்.

-இதழ் : சுரதா (1-4-1969)

நாகரிகம்

மேலோர்கள் இல்லையென்றால் ஒழுக்க மில்லை. நாகங்கள் இல்லையென்றால் மகுடி இல்லை.

நாகரிகம் இல்லையென்றால் பெருமை இல்லை.