உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

37



சாதிமதம்

மதமெல்லாம் பகுத்தறிவு வளர்ந்தால் ஓடும்
மதிபொங்கப் பொங்கவெறி மதங்கள் மங்கும்!

–நூல் : தேன்மழை

கிளர்ச்சி இல்லாவிடில் வளர்ச்சி பிறக்காது–புதுமைக்
கருத்து இல்லாக்கவிதை அதிகநாள் இருக்காது!
மொழி உணர்வில்லாமல் இனஉணர்வே வராது–சாதி
மதம் வளர்க்கும் நாடு முன்னேற்றமே தராது.

–இதழ் : ‘மாலைமணி’

நிறத்தாலே பிறப்பாலே சிறந்தோர் என்று
நினைப்பவரெல் லாங்கடையர் மடையர்...


நன்மைக்கு, நம்செயலைப் பிறந்த நாட்டின்
        நலம்வேண்டி நம்மூச்சைத் தருதல் வேண்டும்.
குன்றைப்போல் தடைசெய்யும், சாதி பேதக்
        கொடுமையிலாச் சமுதாயம் அமைத்தல் வேண்டும்.