பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள் 4?

வரலாறு

இறப்பதுவும் பிறப்பதுவும் வையந் தன்னில் எல்லோர்க்கும் பொதுநிகழ்ச்சி, மனிதன் வாழ்வில் திறமைகள்தான் உண்மைவர லாறு ஆகும்.

- தொழில்வளம்

தெல்தரும் வயலில் சென்று

நெடுநேரம் உழைக்கும் நாமோ, செல்வத்தைப் பெருக்கு கின்ற

தொழில்பல செய்தல் வேண்டும்.

இல்வளம் சுகத்தைக் காக்கும்

இசைவளம் பாட்டைக் காக்கும் சொல்வளம் மொழியைக் காக்கும்

தொழில்வளம் நாட்டைக் காக்கும்

பைந்தமிழ்ச் சொல்லின் விளக்கம் - தமிழ்ப்

பண்ணியல், மண்ணியல் நுட்பம் யந்திர வித்தை விளக்கம் -இவை யாவும் நமக்கிங்கு வேண்டும்.