உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

41



வரலாறு

இறப்பதுவும் பிறப்பதுவும் வையந் தன்னில்
எல்லோர்க்கும் பொதுநிகழ்ச்சி; மனிதன் வாழ்வில்
திறமைகள்தான் உண்மைவர லாறு ஆகும்.


தொழில்வளம்

நெல்தரும் வயலில் சென்று
        நெடுநேரம் உழைக்கும் நாமோ,
செல்வத்தைப் பெருக்கு கின்ற
        தொழில்பல செய்தல் வேண்டும்.


இல்வளம் சுகத்தைக் காக்கும்
        இசைவளம் பாட்டைக் காக்கும்
சொல்வளம் மொழியைக் காக்கும்
        தொழில்வளம் நாட்டைக் காக்கும்


பைந்தமிழ்ச் சொல்லின் விளக்கம் – தமிழ்ப்
        பண்ணியல்; மண்ணியல் நுட்பம்
யந்திர வித்தை விளக்கம் –இவை
        யாவும் நமக்கிங்கு வேண்டும்.