உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சுரதா கவிதைகள்


கல்வி

கற்பு புகழ்தரும், காதல் சுகந்தரும்
கல்வியால் அறிவு நயப்படும் –வெட்டும்
கத்திக்குக் கத்தித்தான் பயப்படும்.


கருவில் இருக்கும்போது
சாதி மதம் ஏது?
கல்வியைப் போல் உலகில்
அழியாத பொருள் ஏது?

–இதழ் : ஊர்வலம் (15–5–63)

தாமரைப் பூவில் மதுவதிகம்
       தனித்தமிழ்ச் சொல்லில் சுவையதிகம்
பாமரர் நெஞ்சில் இருளதிகம்
       படித்தவர் நெஞ்சில் தெளிவதிகம்

–நூல் : தேன்மழை

வீரம்

வெளிச்சத்தின் மரணத்தை இருளென் பார்கள்
வீரத்தின் விளைவுகளை மறமென் பார்கள்.