இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52
சுரதா கவிதைகள்
கல்வி
கற்பு புகழ்தரும், காதல் சுகந்தரும்
கல்வியால் அறிவு நயப்படும் –வெட்டும்
கத்திக்குக் கத்தித்தான் பயப்படும்.
✽✽✽
கருவில் இருக்கும்போது
சாதி மதம் ஏது?
கல்வியைப் போல் உலகில்
அழியாத பொருள் ஏது?
–இதழ் : ஊர்வலம் (15–5–63)
தாமரைப் பூவில் மதுவதிகம்
தனித்தமிழ்ச் சொல்லில் சுவையதிகம்
பாமரர் நெஞ்சில் இருளதிகம்
படித்தவர் நெஞ்சில் தெளிவதிகம்
–நூல் : தேன்மழை
வீரம்
வெளிச்சத்தின் மரணத்தை இருளென் பார்கள்
வீரத்தின் விளைவுகளை மறமென் பார்கள்.