இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ડ8 சுரதா கவிதைகள்
கருங்கடல் மீது கலத்தைச் செலுத்துவோர் கலவர். அதாவது கப்ப லோட்டிக்ள் எண்ணத்தில் புதுமையை இழுத்துக் கட்டுவோர் புலவர். அதாவது புகழுக் குரியவர்
பூவின் வியர்வையே தேனாம் தினம் போரிடும் உன்விழி மீனாம்: பூவையே! பொப்புகழ் சாகும்-மலை பூமியின் கொப்புள மாகும்:
-இதழ். சுரதா (15-7-1968)
கல்லைவைத்தும் கருங்கடலின் நீரை வைத்தும்
கற்றறிந்தார் தமிழ்நாட்டுக் கெல்லை வைத்தார். சொல்லைவைத்தும் சொல்குறிக்கும் பொருளை
வைத்தும் தொல்புலவர் பொய்யாத புகழை வைத்தார்
- நூல்:தேன்.மழை
ஒளியென்றால் வாழ்ந்துவரும் காலந் தன்னில்
உண்டாகும் செல்வாக்கை குறிக்கும். மேலும், தெளிவாகச் சொல்வதெனில் புகழ்மட் டுந்தான்
சிரஞ்சீவியாயிருக்கும்.....
-இதழ்: தென்னகம் (3-6-1971)