உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சுரதா கவிதைகள்


நீரிருந்தால் அந்நீரில் நுரையி ருக்கும்
        நிழலிருந்தால் அந்நிழலில் குளிரி ருக்கும்
தேரிருந்தால் சக்கரங்கள் இருக்கு மென்றான்.
        சிறப்பிருந்தால் புகழிருக்கும் என்று சொன்னான்

–இதழ் உரிமை வேட்கை
–(1974–பொங்கல் மலர்)



வினையெச்சம் பெயரெச்சம் என்பர்; வாழ்வில்
        வேறெச்சம் ஒன்றுளதாம்! அஃது காமப்
பனியெச்சம் என்கின்ற குழந்தை யன்று!
        பாரிலது புகழென்னும் எச்ச மாகும்!

–இதழ்: சுரதா (அண்ணா மலர்)

கல்வி செழித்தால் கவிதை வரும்
        கற்பவை கற்றால் திறமை வரும்
செல்வம் திரண்டால் செழிப்பு வரும்
        திறமை மிகுந்தால் புகழ்வளரும்


“நீ விரிக்கும் விரிப்பென்ன?” என்று கேட்டான்
        “நீள் குழலைப் பாயாக விரிப்பேன்.” என்றாள்.
“பூவிரிக்க மறப்பதில்லை மரங்கள்” என்றான்
        “புகழ்விரிக்க முடிவதில்லை சிலரால்” என்றாள்.

–போபால் தமிழ்ச்சங்கம்
–சிறப்புமலர்(1966–67)