60
சுரதா கவிதைகள்
நீரிருந்தால் அந்நீரில் நுரையி ருக்கும்
நிழலிருந்தால் அந்நிழலில் குளிரி ருக்கும்
தேரிருந்தால் சக்கரங்கள் இருக்கு மென்றான்.
சிறப்பிருந்தால் புகழிருக்கும் என்று சொன்னான்
–இதழ் உரிமை வேட்கை
–(1974–பொங்கல் மலர்)
வினையெச்சம் பெயரெச்சம் என்பர்; வாழ்வில்
வேறெச்சம் ஒன்றுளதாம்! அஃது காமப்
பனியெச்சம் என்கின்ற குழந்தை யன்று!
பாரிலது புகழென்னும் எச்ச மாகும்!
–இதழ்: சுரதா (அண்ணா மலர்)
கல்வி செழித்தால் கவிதை வரும்
கற்பவை கற்றால் திறமை வரும்
செல்வம் திரண்டால் செழிப்பு வரும்
திறமை மிகுந்தால் புகழ்வளரும்
✽✽✽
“நீ விரிக்கும் விரிப்பென்ன?” என்று கேட்டான்
“நீள் குழலைப் பாயாக விரிப்பேன்.” என்றாள்.
“பூவிரிக்க மறப்பதில்லை மரங்கள்” என்றான்
“புகழ்விரிக்க முடிவதில்லை சிலரால்” என்றாள்.
–போபால் தமிழ்ச்சங்கம்
–சிறப்புமலர்(1966–67)