உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

61



ஈகை

தன்னிடத்தி லேவந்து கேட்போ ருக்குத்
        தடையின்றித் தந்திடுவோன்; தலைவி யோடு
அன்றாடம் காண்பானே இரவு இன்பம்;
        அதனை விட அதிகரித்த இன்பம் காண்பான்.


தூங்குவதே சுகமென்று கருதி விட்டால்
        சோற்றினை நாம் கனவில்தான் காணக் கூடும்
வாங்குவதே பெருவழக்க மாகி விட்டால்,
        மற்றவர்க்கு நாமெவ்வா றுதவக் கூடும்?


சிரிக்கச் சிரிக்கச் சிலரே பேசுவர்
சேரச் சேரச் சிலரே கொடுப்பர்


இடிப்பவன் மக்கள் நெஞ்சில்
        இடம் பெறான் திருடிப் பாடல்
தொடுப்பவன் என்றோ ஓர்நாள்
        தோற்றுப்போய் விடுவான். நாட்டில்
நடிப்பவன் பெருமை கொஞ்ச
        நாளைக்கே நிலைத்தி ருக்கும்
கொடுப்பவன் பெயரை இந்தக்
        குவலயம் மறப்ப தில்லை

–நூல் : துறைமுகம்