பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சுரதா கவிதைகள்

மாதமும் ஆண்டும் போல

வாழ்பவள் மனைவி; வீட்டின் சோதியே அவள்தான்! தக்க

துணைவியும் அவளே யாவாள்.

அகம்புறம் இரண்டில், காதல்

அதிகாரம் மனைவி ஆவாள். பகுபதம் கணவன் என்றால்

பகாபதம் மனைவி! நெஞ்சில் புகுமுகம் எதுவே அந்தப்

புதுமுகம் மனைவி இன்ப சகமெனும் நதிக்கு நல்ல

தோணியும் அவளே யாவாள்.

。 & 취 நிலவுக்கு மனைவி விண்மீன்

நினைவுக்கு மனைவி எண்ணம் அலைகடல் நீருக் கெல்லாம்

ஆறுதான் மனைவி........

நாடு நலம்பெற வேண்டும் - எனில்

வீடு விளங்கிட வேண்டும்-எனில்

- இதழ் சுரதா (15.3.1968)