இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
81
நண்பரின் துணையோ நீடிப்ப தில்லை
மனைவியின் துணைதான் மரணம் வரையிலும்
நீண்ட படியே இருக்கும் நெடுந்துணை.
✽✽✽
வெட்டுண்ட பாக்கைப் போல
விலகாமல், வகுத்த வாழ்வில்
கட்டுண்டு கடமை செய்யும்
காரிகை மனைவி யாவாள்.
கட்டில்
அரசு கட்டில் அந்நாளில் இருந்தது.
முரசு கட்டில் முன்னாளில் இருந்தது.
கோனாட்சி மாறிக் குடியாட்சி வந்ததால்
இருவகைக் கட்டிலும் இந்நாளில் இல்லை!
✽✽✽
மங்கை யானபின் மாப்பிள்ளை தேவை
கல்யாண மானபின் கட்டில் தேவை
✽✽✽
ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே சொந்தமடா!
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா! – கண்
மூடினால் காலில்லாக் கட்டிலடா!
–‘நீர்க்குமிழி’ படப்பாடல்