இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள். 81 நண்பரின் துணையோ நீடிப்ப தில்லை. மனைவியின் துணைதான் மரணம் வரையிலும் நீண்ட படியே இருக்கும் நெடுந்துணை.
讀 褒 孕 வெட்டுண்ட பாக்கைப் போல
விலகாமல், வகுத்த வாழ்வில்
கட்டுண்டு கடமை செய்யும்
காரிகை மனைவி யாவாள்.
கட்டில்
அரசு கட்டில் அந்நாளில் இருந்தது.
முரசு கட்டில் முன்னாளில் இருந்தது.
கோனாட்சி மாறிக் குடியாட்சி வந்ததால்
இருவகைக் கட்டிலும் இந்நாளில் இல்லை!
急
மங்கை யானபின் மாப்பிள்ளை தேவை கல்யாண மானபின் கட்டில் தேவை
黎 总 峻 ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா! - கண் மூடினால் காலில்லாக் கட்டிலடா!
- நீர்க்குமிழிபடப்பாடல்