□ராஜம் கிருஷ்ணன்
109
மணி இன்னும் ஒன்றடித்திருக்காது?...
கதவு ஒசைப்படுகிறது.
ரத்னாவின் பேச்சுக் குரல்...
கதவைத் திறக்கிறாள். ஆர்கண்டிச் சேலை விறைத்த நிலையில் ஜோல்னாப் பையுடன் ரத்னா;
ஹலோ...
ரத்னா சிரிக்கிறாள். முதுகைத் தட்டுகிறாள். “அபு வந்திருக்கிறார். கீழே போகலாமா?”
பேசிக் கொண்டே இறங்குகிறார்கள்.
அபுவை லைப்ர்ரி சென்டரின் அருகே தற்செயலாகப் பார்த்தாளாம்.
கீழே வட்டமான பார்வையாளர் கூடத்தில் நிற்கிறான்.
“நீங்க பேசிட்டிருங்க. நான் லஞ்ச் கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்...” அவர்களை உட்கார வைத்து விட்டு அவள் உள்ளே செல்கிறாள்.
“அறிவாளியாக இருக்கக் கூடிய ஒவ்வொரு மணமான பெண்ணுக்கும், சராசரி பழைய மரபுக் குடும்ப ஆணுடன் வாழும் வாழ்க்கையில் நியாயம் கிடைப்பதில்லை என்ற கூற்று... நிரூபணமாகி விட்டது இல்ல!...”
“இப்படி ஒரு திருப்பம் நான் நிச்சயமா எதிர்பார்க்கல. எனக்கு மூச்சு முட்டும் இந்த உழைப்பு நெருக்கடியில் அலுத்து வரும் சோர்வில், ஒர் இடைவெளி வேண்டும், தெளிவு வேண்டும் என்றுதான் போனேன். அதை நான் அவர்களிடம் கேட்டுப் பெறமுடியாதுன்னு தெரிஞ்சு போனேன்...ஆனால், ஏன் என்னன்னு தெரிஞ்சிக்கக்கூட இடமில்லாமல் சேற்றை வாரி இறைத்து, வெளியே துரத்தினார்கள் என்றே சொல்லலாம்...” அவன் ஒன்றுமே பேசவில்லை...சிறிது நேரத்துக்குப் பின் ஆழ்ந்த குரலில்,