பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

சுழலில் மிதக்கும் தீபங்கள்


“நீங்க...நிச்சயமா முடிவா வந்துட்டீங்களா?” என்று கேட்கிறான்.

“எதுவும் புரியல..”

“எனக்கு ஒரு ஸிஸ்டர் இருந்தா. இந்த ஊரில் சுதந்திரமாகப் படித்துப்பழக வளர்க்கப்பட்ட அவளை, எங்கோ நாகப்பட்டினத்துக்குப் பக்கம், பண்ணை, வீடு, மாடு மந்தை பிஸினஸ்னு கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்கள். என்னை விட நாலைந்து வயசு பெரியவள். அவள் செய்த குற்றம் புருஷனைவிட அதிகம் படித்தது மட்டுமில்லாமல் அறிவாளியாகவும் இருந்ததுதான். பெண் பண்ணைச் சீமாட்டியாக இருப்பாள் என்று என் பெற்றோர் நினைத்தார்கள். அம்மை வார்த்துக் குளிர்ந்து போனான்னு, நாங்கள் சேதி வந்து போவதற்குமுன் மண்ணோடு ஆக்கிவிட்டார்கள். என்...என் ஆத்திரத்துக்குக் காரணம் நீங்கள் தெரிஞ்சுக்கணும்னு சொல்றேன்...!”

“நீங்க ஒண்ணுமே செய்யமுடியல?”

“என்ன செய்ய? பெண்களுக்குக் கல்யாணம் என்றால் வெறும் வளமையுள்ள இடம் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்கள், அவள் அழகு, பணம், அடங்கிப் போகும் இயல்பு மட்டும் குறியாக்குகிறார்கள், அது இல்லை என்றால், நீதி செத்துப் போகிறது. சகோதரி, ரத்னா இப்ப ஒரு சர்வேயில் ஈடுபட்டிருக்கிறாள். இங்க, இந்த நாட்டில், இப்ப அதிகமாக வியாபாரம் ஆகும் பொருள், ஏற்றுமதியாகும் பொருள் என்ன தெரியுமா?...பெண்தான். உடல்னு உச்சரிக்கவே எனக்கு மரியாதைக் குறைவாக இருக்கிறது. நீங்கள் திடுக்கிடக் கூடிய தகவல்களை ரத்னாவிடம் கேட்பீர்கள்!”

“உங்க ரெண்டு பேருக்கும் சப்பாத்தி. சப்ஜி, தயிர் கொண்டு வரச் சொல்றேன். வாங்க, டைனிங் ஹாலிக்கு!”

ரத்னா அழைக்கிறாள்.

“வாட் அபெளட் யூ?”