ஆய்வு
5. பாடவேறுபாடு
சொற்பொருள்:
பா
பாடம் வேறுபடுவது பாடவேறுபாடு எனப் படுகிறது. படாம் என்பது மூலபாடம்; நூலாசிரியர், உரையாசிரியர் ஆகியோர் கூறிய உண்மைத் தொடர் மூலபாடம் எனப்பெறுகிறது.
"பாடம் ஏறினும் ஏடது கைவிடேல்" என்னும் பழமொழியில் பாடம் என்பது நூலாசிரியரின் உண்மைத் தொடராகிய மூல பாடத்தையே சுட்டுகிறது. சுட்டுகிறது. அவ்வுண்மைத் தொடர் சொல்வோ ராலும் படிப்போராலும் எழுதுவோராலும் வேறுபட்டு வழங்கப் பெறுமாயின் அது பாட வேறுபாடு என்று பெயர் பெறுகிறது.
ஒரு சொல்லுக்குப் பிரதியாகவரும் பிறிதொரு சொல்லைப் பாடபேதம் என்று குறிப்பர். உதாரணமாக, கோளரி மாதவன் (556) கோளரிவாமனன் போல்வன பாடபேதங்கள் என்பர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். மேலும்
66
1
அடை
"துரியோதனன், திரியோதனன்... என்று வருவன போல்வன ரூபபேதங்கள். ஒரு சொல்லையே இரண்டுவிதமாக வாசித்து உண்மைப் பாடம் இதுவென்று கொள்வதில் மயக்கம் தலும் உண்டு" என்பனவாகிய அனுபவக் கருத்துக்கள் பாடவேறுபாட்டின் தன்மையை உணர்த்துவதோடு அதன் வகைப்பாடுகளையும் சுட்டிக் காட்டுகின்றன.
ம்.
"இவைகளேயன்றிப் பிழையெனக் கொள்ளும் பல சொற்களு தரப்பட்டுள்ளன...அப்பொழுது பிழையென்ற கருத்தேயின்றிச் 1. திவ்வியப் பிரபந்தம், முதலாயிரம்-பதிப்புரை. பக். X.