உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

முன்னிலை சேர்தல்

107

பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தானதிரும் பெண்ணிருவர் பேசில் விழும்வான்மீனே - பெண்மூவர் பேசில் அலைசுவறும் பெண்பலர்கள் தான்கூடிப் பேசிலுல கென்னாமோ பின்" 16

என்பது அதே நூலிலுள்ள மற்றொரு பாடல்.

வேறு :

..பெண்மூவர்

பேசில் அலைசுவறும் பேதையே! பெண் பலர்தாம் பேசிலுல கென்னாமோ பின்” 17

முதல் அமைப்பிலுள்ள ஆசிரியரின் பொதுக்கூற்று, பாடவேறு பாட்டினால் முன்னிலையாரிடத்துக் கூறும் கற்றாக வேறுபட்டு விடுவதை வேறுபாட்டோடு கூடிய இரண்டாம் அமைப்பில்

காணலாம்.

குற்றமின்று

66

குணமின்மையின்மை

து முனைவனாற் செய்யப்பட்ட நூலாகலாற்

குற்றமின் றாயினமையிற் கேட்டாரையின்றென்பது' 18 வேறு : இது முனைவன்றன்னால் சொல்லப்பட்ட நூலாகலாற் குணமின்மை யின்மையின் கேட்டாரையின்றென்பது" குற்றமின்று, குணமின்மை யின்மை என்னும் தொடர்கள் வேறு பாடாகின்றன. முடிவுப் பொருள் ஒன்றேயாயினும் உணர்த்து மாற்றால் குற்றம், குணம் என எடுத்துக் கொள்ளப்பட்ட மறுதலைப்பட்ட சொற்களுக்கேற்ப இன்று என நேரேயும், இன்மை இன்மை என மறுதலைப்படவும் பொருள் தந்து ஒரே பொருளை உணர்த்தும் வேறுபாடுகளாகின்றன. இது உரையிற்காணும் வேறு பாடாகும். இதனை வடிவ வேறுபாடாகவும் கொள்ளலாம். இருப்பார் - இரப்பார்

6 C

இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்"

(குறள் - 1040)

வேறு: "இலம்என்று அசைஇ இரப்பாரைக் காணின்” இலம் என்று சோம்பி இருப்பாரும், இலம் என்று இரந்து உண்பாரும் என்ற பொருள் தரும் இவ்வேறுபாடுகள். பொருட்போக்கால் வேறு

16,

18.

நீதிவெண்பா,பா.31. 17. நீதிவெண்பா சுவடி,டி. 2283. இறையனார் அகப்பெருாள், சூத்-1, உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/123&oldid=1571197" இலிருந்து மீள்விக்கப்பட்டது