212
பதிப்புகளாகும். ஆனால் சுவடி பட்டவை. பதிப்பு நிலைக்கு,
நிலையிலேயே
சுவடி இயல்
தொகுக்கப்
பிள்ளைத் தமிழ்க் கொத்து, அரசினர் சுவடி நூலகம்,
தூதுத் திரட்டு
சென்னை 1957
-
நிறுவனம்
கும்மிப் பாடல்கள், உலகத் தமிழாராய்ச்சி
- 1983
- 1982
ஊஞ்சல் இலக்கியம், ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம். பிள்ளைத்தமிழ் என்பது ஒரு வகை இலக்கியம். பல பாட்டுடைத் தலைவர்கள் மீது பாடப் பெற்ற பல பிள்ளைத் தமிழ்ச் சுவடிகளைத் தொகுத்து வெளியிடப் பட்டதே பிள்ளைத்தமிழ்க் கொத்து. பிறவும் இத்தகைய பதிப்பு களாகும்.
க
ஊ.
மறுபதிப்பு
முதலில் அச்சிட்ட நூல்கள் தீர்ந்துபோன நிலையில் மீண்டும் அச்சிடப்பெறுவது மறுபதிப்பு எனப்படுகிறது. இது பதிப்புத் தன்மையால் மறுஅச்சு எனவும் மறுபதிப்பு எனவும் இருவகைப் படும். இவற்றுள்,
இதில்
மறுஅச்சு : முதற்பதிப்பில் பெரிதும் மாற்றம் இல்லாதது; திருத்தம் இல்லாதது; சேர்க்கைகள், நீக்கல்கள் இல்லாதது; இவ்வாறு மீண்டும் அச்சிடும் பதிப்பு மறுஅச்சு எனப்படும், முதற்பதிப்பில் நிகழ்ந்த அச்சுப்பிழைகள். பிறவாகிய சிறுசிறு பிழைகள் திருத்தம் பெறுவதுண்டு.
மறுபதிப்பு : மறுபதிப்பில் நூலின் ஒவ்வொரு வரியும் படிக்கப் பெறும்; தேவையான திருத்தங்கள் செய்யப்பெறும்; ஒவ்வாத செய்திகள் நீக்கப்படலாம்; அப்பதிப்பிற்குப் பிறகு வேறு சுவடிகள், பிற சான்றோர் கருத்துகள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த புதிய சேர்க்கைகள் இடம்பெறும்; கடிதங்களின் மூலம் கிடைத்த கிடைத்த தகுதி வாய்ந்த மாற்றங்கள் இடம்பெறும்; நூலில் இடம்பெற்ற நிகழ்ச்சி களுக்கேற்ற துணைச் சான்றுகள், படங்கள்,பிற விளக்கங்கள், ஆண்டுக் குறிப்புகள் சேர்க்கப்பெறும்; பதிப்பாசிரியரின் கருத்து வளர்ச்சிக் கேற்பவும், கிடைத்த புதிய நூல்களின் செய்திகளுக் கேற்பவும், ஆய்வு நெறி வளர்ச்சிக் கேற்பவும் புதிய ஆய்வு முன்னுரை அமைக்கப் பெறும்; துணை நூற் பட்டியல் திருத்தம் பெறும்; கலைச்சொல் பட்டியல் மாற்றம் பெறும். இத்தகு மாற் றங்கள் பெற்றுப் பதிப்பிக்கப் பெறுவது மறுபதிப்பு எனப்படும்.