238
சுவடி இயல்
எனவரும்.
யானைக்கோடு கிடந்தது மதிமுகம் வியர்த்தது
கருங்குதிரை ஓடிற்று
விளக்கத்திற்காகப் பிறநூல் மேற்கோள்கள் எடுத்துக்
காட்டப்படுமாயின் உரிய புள்ளிகளிட்டுக் காட்டவேண்டும். தொடருக்கேற்ற முற்றுப்புள்ளியும் பெறும்.
உணர்ச்சிக்குறி ( ! ) : விளிச்சொல்,
முன்னிலைச்சொல்,
வியங்கோள், வியப்பு, உவப்பு, இரக்கம், இகழ்ச்சி, அவலம் ஆகிய உணர்வுகளைப் புலப்படுத்தும் சொல் ஆகியவை நிற்குமிடங்களில் உணர்ச்சிக்குறி இடம்பெறும்.
கொற்கை வேந்தே ! என்காற் பொற்சிலம்பு மணியுடையரியே வேய்புரையும் மென்தோளீ! என்று வேண்டுவரே,
என்பனவற்றுள் அண்மைவிளி,
உணர்ச்சிக்குறி பெற்றன.
மகடூஉமுன்னிலைச் சொற்கள்
தேவரும் அறியாச் சிவனே காண்க! (வியங்கோள்) நங்கைமீர்கள்! இதுஓர் அற்புதம் கேளீர் ! (வியப்பு) என்னுடைய இன்னமுதே !
இராகவனே! தாலேலோ!
(உவப்பு)
கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ காகுத்தா !
கரிய கோவே!
(இரக்கம்)
விதியின்றி, மதியிலியேன்... காய்ந்த வாறே ! (இகழ்ச்சி) அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே !
(அவலம்)
இவை வியங்கோள் முதலாய
பொருளில் வந்த உணர்ச்சிக்
குறிகளின் எடுத்துக் காட்டுகளாகும்.
ஏவற்பொருளில் : ஒருமைஏவல். பன்மைஏவல், உடன்பாட்டு
ஏவல் எதிர்மறை ஏவவ் ஆகிய பொருள்களிலும்
இடப்பெறும்.
பசுபதியீசுரம் பாடு நாவே (ஒருமைஏவல்)
திகையன்மின் பேதைகாள் (பன்மைஏவல்)
உணர்ச்சிக்குறி
மன்னவனே அடியேனை மறவன்மின்: (எதிர்மறை)
இவற்றில் உடன்பாட்டுப் பொருள் எதிர்மறைப் பொருள்களில்
ஒருமை, பன்மையில் வந்த ஏவல் முற்றுகள் பெற்றன.
உணர்ச்சிக்குறி