உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

சொல் அமைப்பால் பொருள் வேறுபடுதல்

263

நம் நாட்டில் இரண்டு மொழிக் கொள்கை கையாளப்படுகிறது. மூன்று மொழித் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இலக்கண அமைதி

ஏதேனும் ஐந்தினுக்கு விடை தருக.

பிரதி திங்கள் தோறும் விடுமுறை.

மனதை,

அவைகளுடன், பணமோ

போன்ற தொடர்களிலும்

வேண்டும்.

பணமோ அல்லது நெல்லோ கொடு. சொற்களிலும் விழிப்பாக இருத்தல்

என்று

தொகை : நற்றிணை, குறுந்தொகை... புறம் என ஏழு நூல் களைக் கூறி - 'என்பன எட்டுத் தொகை அமைந்து விடுவதும் உண்டு.

-

நூல்களாகும்'

அதியமான், ஆய், ஓரி, காரி, பாரி, குமணன், பேகன் என்போர் கடையெழு வள்ளல்களாவர். என பெயர் ஏழு அமையவும் வேறு தவறு நிகழக் கூடும்.

பாரதி 1869-இல் பிறந்தார்; காந்தி 1882-இல் பிறந்தார் என மாறுபடுவதும் ஏற்படலாம்.

ஒரே சொல் பலவாறாக அமைதல் : எழுத்துக்கள், கருத்துகள். கல்வெட்டுகள் நாள்கள்-என்பனவும் எழுத்துக்கள், கருத்துக்கள், கல்வெட்டுக்கள், நாட்கள் என்பனவும் முறையே ஒரே நூலில் இருவகையாக எழுதப்பட்டு விடுவதுண்டு. இவற்றைப் போல,

பிரான்சு, பிரான்ஸ், ஃபிரான்சு, ஃபிரான்ஸ்;

ஜெர்மனி, செர்மனி, செருமனி;

பிரச்சினை, பிரச்சனை, பிரச்னை, பிரஸ்னை;

அக்கறை, அக்கரை; கறுப்பு, கருப்பு;

காக்ஷி, காட்சி; அறுவெறுப்பு, அறுவறுப்பு, அருவருப்பு ஆகிய சொற்கள் ஒரே நூலில் வேறுபட்டு அமைந்து விடுவதுண்டு. பதிப்பாசிரியர் இவற்றைச் சீர்மைப்படுத்தி அமைப்பதில் கருத்தைச் செலுத்த வேண்டும்.

சொற்களை மிகுதியாகப் பெய்தல்,சில சொற்களை அல்லது சில சொற்றொடர்களைத் திரும்பத் திரும்பக் கையாளுதல் ஆகியவை நிகழாமல் திட்பமும் நுட்பமும் உடையனவாகச் சொற்றொடர்களை அமைத்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/279&oldid=1571363" இலிருந்து மீள்விக்கப்பட்டது