உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடி இயல்

23

வளர்ந்த அந்நூல்கள் எழுத்து வடிவம் ெ பறும்போது, எழுத்து வடிவம் தருவோரின் கல்வித்திறன், கேள்வியறிவு, நினைவாற்றல், கற்பனைத்திறன், எழுத்துப் போக்கு ஆகியவற்றுக்கு

வடிவெடுத்து விடுகின்றன.

66

1 தரு வனத்துள் ' யானியற்றும்

தகைவேள்ளிக்

ஏற்ப

கிடையூறாத் தவம் செய்வோர்கள்

வெருவரச் சென் றடை காம வெகுளியென நிருதரிடை 'விலக்கா வண்ணம்

செரு ' முகத்துக் ' காத்தியென ' நின் 10 சிறுவர் 11 நால்வரினும் கரிய செம்மல்

ஒருவனைத் 12 தந் தீதியென உயிர் 18 இரக்கும் 1' கொடுங்கூற்றின் உளையச் சொன்னான்"

61

வேறுபாடுகள் : 1. வனத்தில் 2. யாமியற்றும் 3. தழல் தவ, தனி 4. செய்வோரை 5. சென்றடர் 6. விலங்கா 7. முகத்தில் 8. கார்த்தியெனை 9. உன் 10. புதல்வர் 11. அனைவரினும் 12. தந்திடுதியென 13. ஈர்க்கும் 14. கடுங்கூற்றின்

ஆசிரியர் ஒருவரால் இயற்றப் பெற்ற இப்பாடல் பலசுவடி களில் இவ்வாறான பல வேறுபாடுகளுடன் எழுதப் பெற்றுள்ளது. இந்நிலை மனப்பாடம் செய்யப்பட்ட பாடல்கள் எழுத்து வடிவம் பெற்றபோது ஏற்பட்ட முதல் நிலையாகும். இதில் பொருள் மாற்றம் பெறாத வடிவ வேறுபாடுகளே காணப்படுகின்றன. பிறகு படி எடுத்தவர்களால் ஏற்பட்ட பாட வேறுபாடுகளும் பிழை களும் இவ்வடிவ வேறுபாடுகளிலும் வேறுப்பட்டவையாகும்.

வாய்மொழி வழியாகக் குறிப்பிட்ட ஒரு சில நூல்களை மட்டும் கற்க முடிந்தது. மேலும் பல நூல்களையும் உரை களையும் கற்க வேண்டிய நிலையில் ஏடுகளில் எழுதிப் படித்தனர். 'ஏடா யிரங்கோடி எழுதாது தம்மனத்து எழுதிப் படித்த அந்தகக் கவியின் கூற்று இதனைப்

விரகன்’’62 என்னும்

புலப்படுத்தும்.

சுவடிகளின்

வளர்ச்சி—படியெடுக்கப்பட்டு

வளர்ந்தநிலை :

நூலாசிரியர் தாம் இயற்றும் நூலினை எழுத்துவடிவில் அமைத்துத் தருகிறார். அந்நூலினைப் பிறருக்குக் கற்பிக்கும்

61. கம்பராமாயணம், பாலகாண்டம், 6:10. 62. தமிழ்ப் புலவர் வரிசை, பகுதி - 3, பக்-38,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/39&oldid=1571110" இலிருந்து மீள்விக்கப்பட்டது