உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

இறுதி அமைப்பு - வாழ்த்து

"வேதமுனி வரனுரைத்த புராண மூவா

றாகியதிற் சிறந்துநின்ற விமலன் சீர்த்திக் காதலினா லுரைப்பவர்கேட் பவர்ப டிப்போர் கருதிய பொய் கொலைகளவு காம நீங்கிச் சீதரனார் பொன்னரங்க னுரத்தில் வாழுந்

திருவினரு ளால்மிகுந்த செல்வ மோங்கிப் பூதலத்திற் புத்திரரும் பவுத்திராதி தாமும்

புகழ்பாரம் பரியமதாய்ப் பெருகி வாழ்வார்' 'திங்கள்மும் மாரி பெய்க திருவறம் வளர்க செங்கோல் நன்கினி தரச னாள்க நாடெலாம் விளைக மற்றும் எங்குள வறத்தி னோரு மினிதூழி வாழ்க வெங்கள் புங்கவன் பயந்த மெய்ந்நூல் புகழொடு பொலிக மிக்கே

இவை முறையே நூலின் பயனும் வாழ்த்தும் இறுதிப் பாடல்களாகும்.

49

கூறி முடிக்கும்

இறுதி அமைப்பு - தொகுப்பு: நூலின் செய்திகளைத் தொகுத் துக்கூறும் பாடல்களும் இறுதியில் அமைகின்றன.

h

"தத்தைகுண மாலையொடு தாவில்புகழ்ப் பதுமை

யொத்தவெழிற் கேமசரி யொண்கனக மாலை வித்தகநல் விமலையொடு வெஞ்சுரமஞ் சரிதான்

அத்தகையி லக்கணையொ டாகமண மெட்டே61

என்பது தொகுப்புப் பாடலாகச் சீவக சிந்தாமணிச் சுவடிகளில்

காணப்படுவதாகும்.

"நாமகள்கோ விந்தையொடு நற்காந் தருவதத்தை தாமகுண மாலை தனிப்பதுமை - கேமசரி

மாகனக மாலைவிம லைசுரமை லக்கணையொ

டாகு திருமணங்க ளாம்”62

எனவே

என்னும் இப்பாடலும் சில சுவடிகளில் காணப் பெறுகிறது. வை நூலாசிரியரின் பாடல்களல்ல வென்பதை அறிய மேலும்

முடிகிறது.

59. கோலாசல அரங்கன் சரிதம், இறுதிப் பாடல்.

60. சீவகசிந்தாமணி சுவடி, டி. 15.

61, 62. சீவக சிந்தாமணி இறுதி.

Frou-4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/65&oldid=1571137" இலிருந்து மீள்விக்கப்பட்டது