உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கழக நண்பர்கள் மிகுந்த எழுச்சியோடும். உத்வேகத் தோடும், உணர்ச்சி கொந்தளிக்கின்ற தன்மையிலும், விழாக் கோலம் காட்டுகின்ற வகையிலும் நடத்திக் காட்டியிருக் கிறார்கள். இந்த மாநாட்டை மிக வெற்றிகரமாக நடத்துவதற்குக் காரணமாக இருந்த நெல்லை மாவட்ட தி.மு. கழகத்தின் நிர்வாகிகளை, செயல் வீரர்களைத் தலைமைக் கழகத்தின் சார்பிலே நான் பாராட்டுகிறேன். நன்றிப் பெருக்கோடு பாராட்டுகிறேன் கதிரவன் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் அவர்களையும், செயலாளர்கள் அழகிய நம்பி, கிருஷ்ணன் ஆகியோரையும், பொருளாளர் ஏ.எல். சுப்பிரமணியம் அவர்களையும், துணைச் செயலாளர்கள் நம்பி கருப்பையா, ராமகிருஷ்ணன், கண்ணபிரான், அந்தோணிசாமி, தேவராசன் ஆகியோரையும், தொண்டர் படைத் தலைவர்கள் கோபாலசாமி, அய்யாசாமி, தம்பிதுரை, குமரன் பலவேசம், திருமதி மகாலட்சுமி ஆகியோரையும், விளம்பரக் குழு உறுப்பினர்களாகப் பணியாற்றிய சூரிய நாராயணன், மஸ்தான், எஸ். பி. முத்து ஆகியோரையும், அரங்கு நிர்வாகத்தைக் கவனித்த நண்பர் உசேன் அவர்களையும், இவர்களோடு ஒத்துழைத்த நண்பர்கள் அனைவரையும் நான் நன்றிப் பெருக்கோடு கழகத் தலைமை நிலையத்தின் சார்பில் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். மிச்சப்படுத்திய திறமை! நீங்கள் எல்லா மாநாட்டினுடைய வசூல் எவ்வளவு? மிச்சம் எவ்வளவு? என்பதை அண்ணா அவர்கள் இருந்த காலத்திலேயே நான் கழகத்தின் பொருளாளர் என்ற முறையில் என் வாயிலாகவே அறிய விழைவீர்கள். இன்றைக்குக் கழகத்தின் பொருளாளராக நம்முடைய பேராசிரியர் அவர்கள் இன்றைக்குப் பொறுப்பேற்றிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/28&oldid=1695805" இலிருந்து மீள்விக்கப்பட்டது