உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சின்னஞ்சிவன்

மற்றது ஒரு கிழவி. இருவருக்கும் வயது நூறுக்கும் அதிக மாகவே இருக்கலாம் என்று தோன்றியது. அவ்வளவு மெதுவாகவும் கின்று நின்றும் அவர்கள் நடந்தார்கள். ரஸ்தாவில் சுட்டுப் பொசுக்கும் புழுதியில் அவர்கள் மிகுந்த வேதனையோடு தங்கள் பாதங்களை எடுத்து வைத்தார்கள். அவர்களுடைய உடைகளிலும் முகங்களிலும் படிந்திருந்த ஏதோ ஒரு மயக்குத் தோற்றம் அவர்கள் வெகு தாரம் கடந்து வந்திருக்கிருர்கள் என்று மற்றவர்களே யூகிக்கும் படி தாண்டியது. -

எனது யூகத்தை உறுதிப் படுத்துவது போல் அக் கிழவன் சொன்னுன்: .

"டொபல்ஸ்காயா கபர்னியாவிலிருந்து இவ்வளவு துரமும் காங்கள் கடந்தே வந்திருக்கிருேம். ஆண்டவன் அருள்தான்்.'

அவன் குறிப்பிட்ட இடம் சைபீரியாவில் ஒரு மூலே’ யில் உள்ளது. ஜார் அரசாங்கம் அரசியல் கைதிகளே காடு கடத்தி அங்கேதான்் அனுப்புவது வழக்கம்.

நாங்கள் சேர்ந்து நடந்த பொழுது, அந்தக் கிழவி அன்பு கிறைந்த கண்களால் என்னேப் பார்த்தாள். அவள் கண்கள் ஆதியில் நீல நிறமாக விளங்கி யிருக்கும். அவள் பெருமூச்செறிந்து, கருணை கலந்த புன் ன ைக யு ட ன் பேசினுள். -

"விலாயா கிராமத்தில்உள்ளXபாக்டரியிலிருந்து, என் பெரியவரும் கானும் இவ்வளவு தூரம் வந்திருக்கிருேம்.'

"நீ ங்க ள் ரொம்பவும் களேப்படைந்திருப்பீர்கள் இல்லையா?” -