பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்

25




XXVIII. மாெழி ஆராய்ச்சி

(மொழி ஆராய்ச்சித் துறையில் ஒரு சில தமிழறிஞர்களேனும் இப்போது முனைந்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. இத்துறையில் சில முக்கியப் பணிகள் செய்யப் பெற வேண்டும்.)

1. சென்னையில் மொழி ஆராய்ச்சி நிலையம் ஒன்று எல்லா நவீன விஞ்ஞான ஆராய்ச்சிக் கருவி வசதிகளுடனும் ஏற்பட வேண்டும்.

2. இந்நிலையத்தின் சார்பில் ஒரு முத்திங்கள் வெளியீடு (Quarterly) அவ்வப்போது நடைபெறும் ஆராய்ச்சி பற்றிய விவரங்களை அறிவித்தும், மொழி ஆராய்ச்சித் துறையில் அறிவையும் ஆர்வத்தையும் பெருக்கும் கட்டுரைகள வழங்கியும் பணி புரிய வேண்டும்.

3. 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் இயற்றியுள்ள தமிழ் நூல்களின் இயல்புகளைக் கூர்ந்து ஆராய்ந்து, இக்குழு, தமிழ் இலக்கணத்தை வளர்ச்சியுறச் செய்ய வேண்டும்.

4. தமிழ் மொழியில் 'குழந்தை மொழி' பற்றிய ஆராய்ச்சி விரிவாக செய்யப் பெற வேண்டும்.