பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

செத்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்



5. தமிழ் மக்களிடையே உள்ள வட்டார மொழி வழக்குகள் உச்சரிப்பு முறைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

XXIX அயல் நாடுகளில் தமிழ் ஆராய்ச்சி

1. அருந்தமிழ் அறிஞர் பெருமக்களைக் கொண்ட இலக்கியம்--கலை ஆராய்ச்சிக் குழு ஒன்று எல்லா வசதிகளுடனும் உலக நாடுகள் முழுவதையும் சுற்றிப் பார்த்து, ஆங்காங்குள்ள பழந்தமிழ்ச் சுவடிகளைப் பிரதி செய்தும் படமெடுத்தும் ஆவன செய்யவும், அச்சுவடிகள் பற்றிய விவரணப் பட்டியல் ஒன்றைத் தயார் செய்து வெளியிடவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

2. அக்குழுவே செல்லுமிடங்தோறும் கிடைக்கும் தமிழ் நாட்டுத் தொடர்பு உடைய கலைப்பொருள்களைப் படமெடுத்தும் விலைக்குப் பெறக் கூடியனவற்றைப் பெற்றும் வரவேண்டும்.

3. அரசாங்க ஆதரவில் அருந்தமிழ் அறிஞர்களைக் கொண்ட ஆராய்ச்சிக் குழு ஒன்றைக் கிழக்கு நாடுகட்கு அரசாங்கச் சார்பில் அனுப்பி, அங்குத் தமிழ் நாகரிகம் பரவியுள்ள பான்மையை ஆராய்ந்து, நூல் வடிவில் வெளியிட வேண்டும்.