பக்கம்:செம்மாதுளை .pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மதிப்பிற்குரிய மைத்துனருக்கு வைரமுத்தன்

எழுதியது. இவடம் கூேடிமம். அவடம் கூேடிமமறிய மிக்க ஆவல். இப்பவும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை எங்களுரில் நடக்க இருக்கும் புரவியெடுப்புத் திரு விழாவுக்கு வந்து சேரவேண்டியது. கல்யாணியும் தங்களைப் பார்க்க மிகுந்த ஆவல் உள்ளவளாயிருக் கிருள்: -

இப்படிக்கு,

வைரமுத்தன்,

பட்டமங்கலம்:

தேவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், எங்கோ தனக்கு விரோதமாக, சதி முளைவிட்டிருக்கிறது என்று மட் டும் அவன் முடிவு செய்து கொண்டான். கல்யாணியின் திருமணத்தன்று பட்டமங்கலம் போனவன், மறுமுறை போவதற்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் தேவன் தட் டிக் கழித்துவிட்டான். இந்த முறை அவளுல் தட்டிக் கழித்துவிட முடியுமா? .

பச்சைக்கொடி கிழிந்தது !

வைரமுத்தனைத் தெரியாவிட்டாலும் அந்தப் பகுதி யில் அவனுடைய மஞ்சு விரட்டுக் காளையைப் பார்க்காத வர்கள் இருக்கமாட்டார்கள். அவ்வளவு பிரசித்திபெற்ற மூர்க்கத்தனமான காளே. தை மாதம் முன்ரும் தேதி திருப் பத்துரை அடுத்திருக்கும் சிருவயலில் ஆரம்பமாகும் மஞ்சு விரட்டிலிருந்து, ஆனி மாதம் பாகனேரியில் நடை பெறும் மஞ்சு விரட்டுவரை ஒன்றுவிடாமல் கலந்து கொண்டு பிடிபடாமல் பலரைக் குத்திக் காயப்படுத்தி "குடல் பிடுங்கி" என்று பேர் பெற்றுவிட்டது வைரமுத் தனின் கருமயிலைக் காளே. தொழு திறக்குமுன்பு மஞ்சு விரட்டுக்கு வந்திருப்போர் அத்தனை பேரும் பட்டமங்கலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/19&oldid=565933" இலிருந்து மீள்விக்கப்பட்டது