பக்கம்:செம்மாதுளை .pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

துக் கருமயிலை வந்திருகிறதாவென்று விசாரித்து நேரில் போய்ப் பார்க்காதிருக்க மாட்டார்கள். ஒரு சிலர் அந்தக் காளை மீதுள்ள பற்றுதல் காரணமாக, மேலோகத்து ரிஷப வாகனமோ என்று புகழ்ந்து தங்களையுமறியாமல் கை யெடுத்துக் கும்பிட்டு விடுவார்கள். ரத்தினம் போன்ற குங்குமப் பொட்டு-கொம்பைச் சுற்றிச் சாயத் துண்டு-மணப் பெண்ணுக்குக் கட்டுவதுபோல நெற்றிப் பட்டயம்-எகிப்து நாட்டுக் கோபுரத்தைப் போன்ற திமில்-சிவாஜியின் ஏறெடுத்த பார்வை-அப்பப்பா ! இரும்புக் குண்டு உருண்டோடுவதைப் போன்ற அந்த மாட்டினுடைய ஒட்டம், தெற்குச் சீமையில் மறக்க முடி யாத சரித்திரக் குறிப்பாயிருக்கிறது. அந்த மாட்டைத் தட்டிக் கொடுத்து, கண்ணுக்குக் கண்ணுகப் பாதுகாத்து வந்தான் வைரமுத்தன் என்கிறபோது, அந்தக் காளேயில்ை அவனுக்கு ஏன் புகழ் கிடைத்திருக்காது! ஆம்! அந்த வீரக் காளே வைரமுத்தனுடைய நெஞ்சு உரத்திற்கு எடைக் கல்லாக விளங்கியது:

வைரமுத்தன் கைக்கு அந்தக் காளே வந்ததிலிருந்து எந்த மஞ்சு விரட்டிலும் அதன் மீது எவரும் கை போட்ட தில்லை என்று சொல்லுவார்கள். ஏன், வைரமுத்தனே பல இடங்களில் சவால் விட்டிருக்கிருன்.

தமிழ் நாட்டில் ஒரு மஞ்சு விரட்டில் பிரகடனப் படுத்துகிற ஒரு அறிக்கை தமிழ்நாடு முழுதும் தெரிவிக்கப் பட்டு விட்டதாக அர்த்தமாம்! ஏனென்ருல் தமிழ் நாட் டைச் சேர்ந்த அத்தனை வாலிபர்களும் மஞ்சு விரட்டில் கலந்து கொள்வார்களாம்! அதனுல்தான் வைரமுத்தன் சிருவயல் மஞ்சு விரட்டில் நெஞ்சுரத்தோடு ஒரு தகவலை வெளியிட்டான். தன்னுடைய காளையைப் பிடிப்பதற்குத் தமிழ் நாட்டில் ஆளில்லை என்பதற்கு அறிகுறியாக இனி மேற்கொண்டு காளையின் இரு கொம்புகளுக்கிடையே பச். சைக் கொடி கட்டிப் பறக்க விடப்படும் என்று தண்டோ

co

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/20&oldid=565934" இலிருந்து மீள்விக்கப்பட்டது