பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

செயலும் செயல் திறனும்



இயக்கத்தைக் கொடுக்கிறது; இயக்கந்தான் உடலை நிலைநிற்கச் செய்கிறது. உடல் இன்றேல் இயக்கமில்லை; இயக்கம் இன்றேல் உடல் இல்லை என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, உடலை நாம் இயக்க வேண்டும்.

படுத்துக்கொண்டே உடலை நலமாக வைத்துக்கொள்ள இயலாது. உடல் ஒரு பொறி போன்றது. அந்தப் பொறி இயங்கியாக வேண்டும். அதிலுள்ள அனைத்துக் கருவிகளும் அதனதன் தேவைக்கேற்ப இயங்கியாகல் வேண்டும். எந்தக் கருவி இயங்கவில்லையோ, அந்தக் கருவி நாளடைவில் செயலை இழக்கிறது. ஒரு கருவி செயல் இழந்தபின் அதை இயங்க வைப்பது கடினம் கண் ஒளித்திறனை இழந்துவிட்டபின், அதனை மீட்டெடுப்பது மிகவும் அரிது; காது ஒலித்திறனை இழந்துவிடில், அதனைச் சரிசெய்வது மிகவும் கடினம். கை, கால்கள் இயங்காமல் தொய்ந்து போனால், அவற்றை மீண்டும் இயங்க வைத்தல் இயலாது. இப்படியே நம் உடலிலுள்ள ஒவ்வோருறுப்பும் தன்தன் ஆற்றலை இழந்து விடுமாயின், அவற்றைச் சீர் செய்தல் மிக மிகக் கடினம். பொறிக்கும், உடலுக்கும் அதுதான் வேறுபாடு. உடல் பொறி கெட்டுப்போனால், இயந்திரப் பொறியைப் போல் அதனை ஒக்கிடவோ மாற்றியமைக்கவோ அரும்பாடுபட வேண்டியிருக்கும். சில நேரங்களில் சில உடல் உறுப்புகளைச் சரி செய்யவே முடியாமற் போய்விடும். எனவேதான், நம் உடலைக் கெட்டுப் போகாமல் எச்சரிக்கையாக வைத்துக் கொள்வது உடலொடு பிறந்த ஒவ்வோர் உயிருக்கும் உண்டான முதற்கடமை என்று உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

{{gap}உடல் இயங்க வேண்டும். அது தானே இயங்காது, எனவே, அதை இயக்க வேண்டும். உடலை இயக்குவதற்கு இரண்டு உள் ஆற்றல்களும், ஒரு புற ஆற்றலும் தேவை. இயந்திரப் பொறியை இயக்க மின்சாரம் தேவை. மின்சாரம் இரண்டு ஆற்றல்களால் உண்டாவது ஒன்று நேர்மின் ஆற்றல்; மற்றொன்று எதிர்மின் ஆற்றல். இரண்டும் இணையும் பொழுதுதான் மின் ஆற்றலின் இயக்கம் தொடங்குகிறது. ஆனால், இந்த இரண்டும் தாமே இணையாது. அவை இணைய ஒரு புறப்பொருள் அஃதாவது பருப்பொருள் தேவை. அதுபோலவே உடல் இயக்கம் கொள்ள, மனமும் அறிவும் இரண்டு அக ஆற்றல்களாக, அஃதாவது, இரண்டு நுண்பொருள் ஆற்றல்களாக, நின்று செயல்படுகின்றன. ஆனால், அவை இரண்டும் இணைந்து இயங்க உடல் முழுமையான பருப்பொருள் தன்மை பெற்றிருத்தல் வேண்டும். உடலியக்கத்தால் அந்தப் பருப்பொருள் தன்மை குறைபடும். அது குறைவுபட குறைவு பட மீண்டும் மீண்டும் பருப்பொருள் தன்மையை, அஃதாவது பருப்பொருள் ஆற்றலை இட்டு நிரப்ப வேண்டும். அந்தப் பருப்பொருள் ஆற்றலையே நாம் உணவிலிருந்து பெறுகிறோம்.

எனவே, உடல் இயங்க மனம், அறிவு ஆகிய இரண்டு நுண்பொருள்