பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

145



ஆற்றல்களும், உணவு எனும் ஒரு பருப்பொருள் ஆற்றலும் தேவை. மனம், அறிவு, உணவு ஆகிய இந்த மூன்று கூறுகளும் சரியாக இயங்குமானால், உடல் இயங்குகிறது. இந்த மூன்று கூறுகளில், மனம், அறிவு ஆகிங் இரண்டு துண் கூறுகளும் இயற்கையால் நமக்கு அளிக்கப்பட்டவை. உணவிலிருந்து கிடைக்கும் பருப்பொருள் ஆற்றல் கூறு ஆகிய ஒன்றையே நாம் தேடி, உடலியக்கத்துக்கு அளித்தல் வேண்டும்.

மேலும், மேற்கூறிய மூன்று ஆற்றல்களும், உள்ளும் புறமுமாக உடலுக்குள் இணைந்து உடலை இயக்கினாலும் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவே இயங்குகின்றன; உடலையும் இயக்குகின்றன. எரிகின்ற மின்சாரக் குமிழ் ஒன்றைப் பாருங்கள். அதில் எரிகின்ற டங்சுடன் (Tungston) என்னும் எளியிழைப் பருப்பொருளால் ஆனது. அதைச் சூடேற்றி எரிய வைக்கின்ற மேற்கூறிய மின்னாற்றல்கள் இரண்டும் அவ்விழையில் ஒன்றிணைகின்றன; அதனாலேயே குமிழ் ஒளி பெறுகிறது. இது போன்றதுதான் உடலும்.

இனி, உடலியக்கத்துக்கு மிகு தேவையான மனம், அறிவு, உணவு (அஃதாவது உண்ணுதலின் வழியாக உள்ளே செலுத்தப்படுவதால், அதை உணஷ் என்று சிறப்பித்துச் சொல்லுகிறோமே தவிர, அஃது ஒரு பருப்பொருள் ஆற்றலை உண்டாக்குகிற ஒரு புறக்கருவியே) ஆகிய மூன்று ஆற்றல்களும் தம்முள் ஒத்து இயங்கினால்தான் உடல் இயங்கும் என்னும் ஒரு மெய்ம்மத்தை (தத்துவத்தை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மூன்றில் ஒன்று கெட்டாலும் மற்ற இரண்டும் சரியாக இராது. அஃதாவது மனம் கெட்டால் அறிவும், உணவும். சரியாகப் பொருந்தா, அறிவு கெட்டால் மனமும், உணவும் சரியாகப் பொருந்தா, உணவு கெட்டாலும் அறிவும் மனமும் சரியாகப் பொருந்தா) எனவே, உடல் இயங்க மனம் இயங்க வேண்டும்; அறிவு இயங்க வேண்டும் புறப்பொருள் ஆற்றலாகிய உணவு, உடலியக்கத்தால் குறையக் குறைய, இட்டு நிரப்பப்பட்டுக் கொண்டே இருத்தல் வேண்டும் இந்தப் புறப் பொருளாற்றலாகிய உணவை அவ்வப்பொழுது இட்டு நிரப்பும் ஒரு பணியையே இயற்கை நமக்குக் கடமையாகக் கொடுத்திருக்கிறது. மற்ற இரண்டும் நமக்கு எளிதில் புலப்படாத நுண் ஆற்றல்களாகையால், அவ்விரண்டையும் இயக்கும் செயலை, இயற்கை தானே வைத்துக் கொண்டுள்ளது. ஏனெனில் அவற்றை இயக்குவதற்கு நமக்கு மிக மிக மேம்பட்ட துண் ஆற்றல்கள் தேவை. அதைப்பற்றியெல்லாம் இங்கு விளக்கத் தேவையில்லை.

இனி, மேற்கூறிய இவ்வடிப்படை உண்மைகளை உணர்ந்து கொண்டால்தான், நாம் நம் உடலை நோய்வாய்ப்பிடாமல், அஃதாவது கெட்டுப்போகாமல் நலம்ாக வைத்துக் கொள்ளவும், அதனை உலகச் செயல்களுக்கு ஈடுபடுத்தவும் முடியும். அதனாலேயே மேற்கூறிய விளக்கங்கள் தேவைப்படுகின்றன.