பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

149



மேலே குறிப்பிடப்பெற்ற பயிற்சிகள், அல்லது விளையாட்டுகள் கட்டாயம் தேவை.

பொதுவில் நாம் எந்தச் செயலை அல்லது பணியை அல்லது உழைப்பைச் செய்தாலும், அதைத் திறமையுடன் செய்வதற்கு முதலில் நம் உடலே அடிப்படையானது. ஆகையால் நாம் அதை நலமாகவும், வளமாகவும் வைத்துக் கொள்வதே முதற் கடமையாகும். செயல்கள் உடல்நலக் குறைவினாலேயே திறமையோடு செய்யப் பெறுவதில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உடல் நலத்திற்கு மூலத்தேன். வே உடல் உழைப்புத்தான். உழைப்பால்தான் உடல் நலம்தரும் உணவை ஏற்றுக் கொள்ளும் தகுதியையும், அதை ஆற்றலாக மாற்றும் திறனையும் பெறுகிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உடலைக் களைப்புற உழைப்பில் ஈடுபடுத்திய ஒருவர்க்கு அடுத்த தேவை உணவாகும். எனவே, அதுபற்றியும் நாம் சிறிது கூடுதலாய்த் தெரிந்து கொள்ள வேண்டும்.

2. அளவான உணவு (Balanced Diet)

'அற்றால் அளவறிந்து உண்க' என்பது திருக்குறள் மொழி (943) திருவள்ளுவப் பேராசான், தாம் எழுதிய திருக்குறளில், மருந்து அதிகாரத்தில், உணவுத் தொடர்பாக கூறிய அத்தனைக் கருத்துகளும் மிக மிக நன்றாக ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை.

1. முன் அருந்திய உணவு முழுவதும் செரித்தபின்பே மீண்டும் உண்ண வேண்டும். (942 உண்ட உணவு செரிப்பதற்குள் உண்ணக்கூடாது.

2. எது நமக்கு எளிதாகச் செரிக்கிறதோ அதையே போற்றி உண்ண வேண்டும் (942) (ஒருவர்க்கு எளிதாகச் செரிப்பது, இன்னொருவர்க்கு எளிதாகச் செரிக்காது.

(எனவே, எந்த வகை உணவு தமக்குப் பொருந்தியதோ அஃதாவது எளிதாகச் செரிக்கிறதோ, அந்த வகை உணவையே அவர் விரும்பி உண்ணவேண்டும். சிலர்க்கு எண்ணெய் உணவு செரிக்காது. சிலர்க்குக் கோதுமை உணவு செரிக்காது; சிலர்க்குப் புளியுணவு செரிக்காது: சிலர்க்கு சில பழவகைகள் செரிக்கா. எனவே அவரவர்க்கு எளிதில் செரிக்கும்படியான உணவையே உண்ணவேண்டும்)

3. செரித்த பின், அதுபோல் செரிக்கின்ற அளவே உண்ண வேண்டும் (943) (உணவு செரிக்கின்றது என்பதற்காக, அதிக அளவும் உண்டுவிடக்கூடாது. ஏனென்றால் செரிக்கின்றதன்மையுள்ள உணவும், அளவுக்கு மீறினால் செரிக்காமல் போகலாம்.)

4 நம்முடைய உடல் உள்ளம் அறிவு ஆகியவற்றின் இயக்கங்களுக்கு மாறுபாடு அல்லாத உணவையே உண்ண வேண்டும் (944), (உணவால்