உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் அலுவல் 21 என்று சோகம். அவர்களுக்கென்ன தெரியும், மகன், உல்லாச வேட்டையாடுகிறானே தவிர, ஊருக்கு உபகாரம் செய்ய ஒரு துளியும் வேலை செய்யவில்லை என்பது? அலைந்து தீர வேண்டும், திரிந்து கிடக்க வேண்டும், பாடுபட்டுப் பணம் தேடியே ஜீவித்தாக வேண்டும் என்ற நிலையில் பலர் இருப்பதற்குக் காரணம், அவர்கள் தலையிலே ஆண்டவன் அப்படி எழுதினான் என்பது, மிட்டாதாரணியின் எண்ணம். மகன்,ஏதோ பாடுபடுகிறான் மற்றவர்களுக்காக என்று வருத் தப்பட்டார்கள் அந்த அம்மையார். இரவெல்லாம் குடித்து விட்டுக் கிடப்பதால், பூபதியின் உடல் இளைத்தது. அதை அம்மையார், மகன் ஊருக்கு உழைத்து அப்படியானான் என்று எண்ணிக் கொண்டார்கள். "உன் அந்தஸ்துக்கும், செல்வத்துக்கும், இது ஒரு பிரமாதமா? நேற்றுத் தோன்றியவர்களெல்லாம், ஷெவர் லேயில் போகும்போது, நீ ஏன் 'ரோல்ஸ்ராயில்' போகக் கூடாது? அந்தப் பயல், 'ரேஸ்' கிளப்பிலே, ஆயிர ரூபாய் நோட்டை அலட்சியமாக வீசி எறிகிறான்; நூறு ரூபாய் நோட் எடுப்பதென்றால் உனக்குக் கைநடுக்கம் பிறக்கிறது. உன் அந்தஸ்துக்கு ஏற்றபடியா உடை இருக்கிறது? 'ட்வீட் இல்லாமல் டாக்டர் தாமோதர் வெளியே கிளம்புவதில்லை; உன் உடையைப் பார்! செச்சே! என்ன இருந்தாலும், நீ இப்படி உன்னுடைய செல்வ நிலைக்குக் குறைவாக, மட்ட மாக, வாழ்க்கையை நடத்தக்கூடாது. மதிக்கமாட்டார்களே ஜனங்கள்!"எனனடா மகா பிரமாதம்! அவனபெரிய ஆசாமி யின மகன என்று சொல்லுகிறாய்; அவனுந்தான '555' பிடிக்கிறான்; நம்முடையதும், அதே ரகச் சிகரெட்தான்" என்று, அன்று ஒரு நாள் அப்ரகாம் சொன்னான். எனக்கு வெட்கமாகத்தான இருந்தது. எவ்வளவு செலவு செய் தாலும் உனக்குத் தகும்." செல்வவான்களின் செருக்கு, அவர்களையே அழிக்கும் நெருப்பாக மாறும். ஆகவே அவர்கள் உள்ளத்திலே அந்த நெருப்புக் குறையாதபடி நாம் அடிக்கடி தூண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; அதிகமாகச் செலவு செய்