உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பூபதியின் கிறோம், அனாவசியமாகச் செலவு செய்கிறோம் என்ற எண் ணமே, அந்தச் சீமானுக்குத் தோன்றக்கூடாது. எவ்வளவு செலவு செய்தாலும் கெடுதி இல்லை; தகும். மேலும் அப்படிச் செலவு செய்வதுதான் நமது அந்தஸ்துக்கு ஏற்றது. ஜனங் கள் அப்போதுதான் நம்மைக் கண்டால் மதிப்பார்கள்: செல வைச் சுருக்க ஆரம்பித்தால், கேவலமாக நினைத்துவிடுவார் கள் என்ற இப்படிப்பட்ட எண்ணம் சீமானின் மனதிலே முளைத்தபடி இருக்க வேண்டும். அந்தப் பயிர் செழிப்பாக இருக்க முகஸ்துதி என்ற தண்ணீரை நாம் பாய்ச்சியபடி இருக்க வேண்டும் என்ற தத்துவம், கோடீஸ்வரனுக்கு. பெயர் கோடீஸ்வரன்; நிலைமை மகா மோசம். ஆசாமியோ பலே பேர்வழி, மரத்திலே நான் பழம் இருக்கும்;நாம் நடந்து செல்லும் பாதையிலேயா இருக்கும்? பாதையிலே, முள்ளும் கல்லும்தான் இருக்கும். நமக்கு இந்தக் கல்தான் கிடைக் கும்; கனி தோட்டக்காரனுக்குத்தானே கிடைக்கும்? நாம் பாட்டையிலே போக வேண்டியவரானோம் என்று சொல் பவன், பைத்தியக்காரன். கிடைக்கிற கல்லை, எடுத்துத் தொலைவிலே தொங்கும் பழத்தை நோக்கி வீசினால், பழம் கீழே விழுகிறது. கல்லை விட்டுவிடு, கனியை எடு; சாப்பிடு! இதுதானே புத்திசாலி செய்ய வேண்டிய காரியம்? பாதை யிவே நடந்து கொண்டே, காலிலே கல் தடுக்கினால் கஷ்டப் பட்டு, அதே நேரத்திலே, மேலே அண்ணாந்து பார்க்கும் போது, மரத்திலே கனி குலுங்கக்கண்டு, ஏக்கமடைந்து நடப்பவன் ஏமாளி. மேலே பழம், உன் காலடியிலே கல்! கைக்கும் கருத்துக்கும் கொஞ்சம் வேலை கொடு. கனி பிறகு உனக்குத்தான். மரத்துக்கா, தோட்டக்காரனுக்கா?- இந்தத் தர்க்கம் செய்பவன கோடீஸ்வரன், பணம், பணக்காரனிடம் இருக்கிறது, மரத்திலே பழம் இருப்பது போல! ஏழையிடம், பணமில்லை; ஆனால் பணக்காரனிடம் உள்ள பணத்தைப் பறிக்கும் 'வித்தை' கூடவா இல்லை? அவன் மூளைக்குக் கொஞ்சம் வேலை கொடுத்தால்தானே என்பான் கோடீஸ் வரன. அந்த முறையிலே, சீமான்களின் தோழனாக இருந் தான், இலாபத்துடன். சீமான்களின் மனது குளிரும்படி பேசு வான். கெஞ்சுவதில்லை ;பணம் ஒரு பிரமாதமா என்று சொல்