உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் அலுவல் 31 இருந்த பூபதியையும் பார்த்தான்; ஆரம்பித்தான் ஆவேச மாக. ஜனங்களின் கண்ணும் கருத்தும், பேச்சாளி பக்கம் திரும்பிவிட்டது. 'பாடுபடுபவர்களே! மேனி கருத்தவர்களே' என்று வார்த்தைகள் கணீர் கணீரெனக் கிளம்பிற்று. பூடதி யின் முகத்திலே வெறுப்புக்குறி தோன்றிற்று. தொழிலாளி கள் கூட்டம்போலிருக்கு என்று மெள்ளக் கூறிக்கொண்டே, மோட்டாரைச் சற்று வேகமாக ஓட்டலானான். ஆனால் பிரசங்கியின் குரல் வேகமாக, அழுத்தமாக, ஆவேசத்துடன் மோட்டாரைத் துரத்திக் கொண்டு வருவதுபோல் இருந்தது. கூட்டத்திலே ஒலிபெருக்கி இருக்கவே, பூபதியின் செவியில், "ஒட்டி உடல் உலர்ந்து ஏன் நாம்ப இருக்கிறோம்? பாடு படாமலா இருக்கிறோம்?ஏன் பசியாரச் சாப்பிடக்கூட முடிய லேன்னு கேள்வி கேட்கறயேப்பா! அதோபார், போறான், உழைப்புறிஞ்சி! அதுபோன்ற ஜென்மங்களைக் கொழுக்க வைக்கத்தான் நாம்ப பரம்பரை பரம்பரையாப் பாடுபட்டுப் பாடுபட்டு இந்தக் கதியானோம். தெரியுதா? நாம்ப இப்படி இருக்கக் காரணம், அவனுங்க அப்படி இருக்கிறதாலே தான்" என்று அந்தப் பிரசங்கி பேசியது தெளிவாகக் கேட்டது. கோபம் அதிகரித்தது பூபதிக்கு! மோட்டாரின் வேகமும் அதிகரித்தது. வேகம், பங்களா வாசற்படிக் கதவைத் தாக் கிற்று. கோபம், தோட்டக்காரன் முதுகிலே சுரீல் எனப் பாய்ந்தது. ஆனால் அன்று இரவு, பூபதியின் தலையணை நனைந்துவிட்டது. வெட்கம், கோபம், துக்கம் யாவும் ஒரே சமயத்திலே தாக்கியதால் மனம் கண் வழியாக நீரைச் சொரிந்தது! தூங்க முயற்சித்தான்; முடியவில்லை. "உழைப்பை உறுஞ்சுபவன்! போகிறான் பார்! அந்த ஜென் மங்களை நாம் கொழுக்க வைக்கிறோம்" என்ற சத்தம், அவன் செவியைத் துளைத்துக்கொண்டே இருந்தது. சோடா குறைவாகக் கலந்து, விஸ்கியைச் சாப்பிட்ட பிறகும் அந்தச் சத்தம் கேட்டபடி இருக்கவே, பூபதி, ரேடியோவைத் திருப்பினான். "பஞ்சம் பரவி, பட்டினி அதிகரிக்கவே, பாட்டாளிக் கூட்டம் படைபோலத் திரண்டு மாளிகைகளில் நுழைந்து