பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 காப்புப் பருவம் மனஅறத்தில் இன்பமுறும் மகப்பெறுவான் விரும்புவார் அனயநிலை தலைநின்றே ஆடியசே வடிக்கமலம் நினைவுறமுன் பரசமயம் நிராகரித்து நீருக்கும் (புரிந்தார் புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும் தவம் அருக்கன்முதல் கோள்.அனைத்தும் அழகிய உச் சங்களில் பெருக்கவலி யுடன் நிற்கப் பேணியநல் ஒரைஎழத் திருக்கிளரும் ஆதிரை நாள் திசைவிளங்கப் பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதிகமும் தழைத்தோங்க திசை.அனைத்தின் பெருமைஎலாம் தென்திசையே வென்றேற மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனிவெல்ல அசைவில்செழும் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல இசைமுழுதும் மெய்யறிவும் இடம்கொள்ளும் நிலைபெருக அவம்பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம் பரசமயம் பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்படநல் ஊழிதொறும் தவம்பெருக்கும் சண்பையிலே தாவில்சரா சரங்கள் எலாம் சிவம்பெருக்கும் பிள்ளையார் திருவவதா ரம்செய்தார். என்று குறிப்பிடுதல் காண்க. இன்ஞேரன்ன காரணங்களால் சிவபாத இருதயர் மகிழ்ந்தனர். ஆதலின், 'சிவபாத இருதயர் உளத்துவகை நண்ண' என்ருர். பொருள் என்பது பெற்றெடுக்கும் பிள்ளை களைக் குறிக்கும் என்பதை, 'பொருளோடு புணர்ந்த பக்கம்’ எனத் தொல்காப்பியத்தும், 'தம் பொருள் என்ப தம்மக்கள்' எனத் திருக்குறளிலும், "ஒண்பொருளும் நீ" என அப்பர் பெருமானர் வாக்கிலும் அறியவருவதை அறியவும். ஆகவே, ஒண் பொருள் ஆதலால் எனப்பட்டது.