பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 459 வாரணத்தில் இவரைவரக் கண்டதிரு வீதி மறுகுதொறும் தூய்மைசெய்து வாழைகளை நாட்டிப் பூரணகும் பமும் அமைத்துப் பொரியும்மிகத் தூவிப் பொன்னரிமா லேயும் நறும்பூ மாலைகளும் தாக்கித் தோரணங்கள் திரைத்துநிரை நறுந்துாபம் ஏந்திச் சுடர்விளக்கும் ஏற்றிஅணி மணிவிளக்கும் ஏந்தி ஆரணங்கள் விரித்தோதி மாமறையார் எதிர்கொண் டறுகெடுப்ப வாழ்த்தெடுத்தார் அரம்பையார் (எல்லாம் என்று போற்றியதல்ை, இவர் எவர்க்கும் சுவை அமுதாய்த் துலங்கிய உண்மை புலனுகிறது. (46) 6. நூலாறு தேர்ந்தவர் உஞற்றும் அக் குண்டங்கள் நோக்கி அழல் பாய மேய நுவல்புலவர் உதரகுண் பத்தில் சருப்பாய நோன்மைசால் மேகம் எல்லாம் சாலாறு பாயவலை யெறியுததி பாயத் தவாதருவி வரைகள் பாயத் தையலார் குரிசிலார் மேல்சம்ப ராசிபொழி சரம்எலாம் பாய மலரில் காலாறு பாயஅம் மலர்மதுப் பாயக் கமழ்ந்தபட் ட்த்தி னின்றுங் கற்பம் கழுத்தொடிய வாளைப யப்பொய்கை கருமேதி பாய மிக்குப் பாலாறு காலாறு பாய்தொண்டை தன்னுட பவளவாய் முத்தம் அருளே பரவுசீர் உலகெலாம் விரவுசே வையர் பிரான் பவனவாய் முத்தம் அருளே. (அ. சொ. நூல்-வேதநூல், ஆறு-ஆறு வகையான சாத்திரங்கள், உஞற்றும்-நடத்தும், குண்டங்கள்-யாக