பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 479 விண்ணரு மதிமுயல் கலைகிழிந்து இழிஅமுத வெள்ளருவி பாயவெடி போய் மீளும் தகட்டகட் டிளவாளே மோதமுகை விண்டொழுகுமுண்டகப்பூந் தெண்ணுரு அருவியாய என்றும், மீத்தந்த மாகத்து மேகத்தி ளுேடுமூடு மீன் இரியல் போகவுகளும் வெடிவாளை மதிஅகடு உடைத்துாற்று தெள்ளமுத வெள்ளருவி என்றும், குரவையிடு துழனியில் கொண்டல்திரை யத்தாவு குழவுப் பகட்டுவாளே சேடுபடு புத்தேள் நிலத்துப் புனிற்றிளம் சேதா வயிற்றுமுட்டச் சேங்கன் றெனத் தடவு மடிமடை திறந்துாற்று தீம்பால் சினைக்கற்பகத் தேடுபடு தடமலர்த் தேன்.அருவி யொடுசொரிந்து ஏரியொடு கால்நிரம்ப இழுதுபடு கழனியும் தெய்வமணம் நாறஏன்று இன்சுவை முதிர்ந்து விளையும் என்றும், வாளைமீன்களின் அட்டகாசங்களைக் குமரகுருபரர் பாடியிருப்பதைக் காண்க. இவ்வாறே எருமைகளின் செயல்களையும், தென்னம் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்பத் திங்கரும்பும் தேமா நிழற்கண் துஞ்சும்இளம் செங்கண் கயவாய்ப் புனிற்றெருமை இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளிமடித் தலம்நின்று இழிபால் அருவி உவட்டெறிய எறியும் திரைத்திம் புனல்பொய்கை என்றும் பாடியுள்ளனர். (51)