பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 . வாரானைப் பருவம் கைவரை மூலமேயோ எனக்கரிக் குதவும் காட்டில் மொய்வரை எடுத்தான் மூலம் ஆயிட வேண்டுமோதான் ஐயனே முறையோ எனருல் அரசனே அங்குச் செல்வான் வையகம் காப்பான் செய்கை வழக்கன்ருே ஊர்க்காப் பான்போல் என்று அருளியதையும் அந்நூலில் காணவும். திருச்சிற்றம்பல வன் கருணை வடிவினன் என்பதைச் சேக்கிழார் 'கற்பனை கடந்த சோதி கருணையே வடிவ மாகி' என்று போற்றுமாற்ருல் உணரலாம். இறை வன் கருணைக்கடல் எனத் தோத்திர நூல்கள் பல இடங் களில் கூறுதலே ஈண்டு நினைவு கொள்க. சிற்றம்பலவர் கருணைக்குப் பல எடுத்துக் காட்டுக்களை எடுத்துக் காட்டலாம். அவற்றுள் சில கீழ் வருவன: குங்கிலி யக்கலய நாயனர் மிக்க பசியினுல் இருத்தலை அறிந்து, சாலநீ பசித்தாய் உன் தன் தடநெடும் மனையில் நண்ணி பாலின் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக. என்ருர், அப்பர் பெருமானர் பசித்து இளேத்து வருதலே அறிந்து, வெங்கண் விடைவே தியர்நோக்கி மிகவும்வழிவந் திளைத்திருந்தீர் இங்கென் பாலே பொதிசோறுண் டிதனை உண்டு தண்ணிர்இப் பொங்கு குளத்தில் குடித்திளைப்புப் போக்கிப் போவிர் எனப்புகன்ருர், சீர்காழிச் செம்மலார் அழுவதை அறிந்த திருத்தோணி யப்பர், தம் கருணையினல், அழுகின்ற பிள்ளையார் தமைநோக்கி அருட்கருணை எழுகின்ற திருவுள்ளத் திறைவயர்தாம் எவ்வுலகும் தொழுகின்ற மலைக்கொடியைப் பார்த்தருளித் துணை முலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத் தூட்டென்ன என்று பணித்தருளினர்.