பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 559 கற்பகப்பூந் தளிர்அடிபோய்க் காமருசா ரிகைசெய்ய உற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடும் கைப்பெயரப் பொற்புறுமக் கையின்வழிப் பொருகயல்கண் புடைபெயர அற்புதப்பொற் கொடிதுடங்கி ஆடுவபோல் ஆடுவார் என்ற இவரது நடனக் கலைஞானத்தைக் காண்க. இவரது ஊக்கத்தினை இப்பெரிய புராணத்தினை ஒராண்டில் முடித்த தல்ை அறியலாம். இவரது திண்மையினே அரசனிடம் 'சிந்தாமணிக் கதை வேண்டா, சிவனடியார் கதைகளைக் கேட்க” என்று கூறியதல்ை தெளியலாம், அப்படிக் கூறி வெற்றி கண்டதையும் அறியலாம். சேக்கிழார்க்கு உள்ள சிறப்பு எப்புலவர்க்கும் இல்லை. இவர் தெய்வப் புலவர் என்ற பெயரினைப் பெற்றவர். இப்பெயருடைய மற் ருெருவர் திருவள்ளுவர். இறைவன் எடுத்துக் கொடுத்த தொடர் பெற்றுப் பாடிய சிறப்பும் பெற்றவர். இவர்க்கு முன் இச்சிறப்புப் பெற்றவர் சுந்தரர். ஏனைய புலவர் களின் சிறப்பினைத் தனித்தனிப் பாடல்களான தனியன் பாக்களால் அறியலாம். இவரது சிறப்பினை விளக்கும் தனிநூல் பெற்றவர் இவரே ஆவார். அதுவே இப்பிள்ளைத் தமிழ். தனிப் புராணமும் பெற்றவர் இவரே. அப்புராண மும் சித்தாந்த செம்மலாம், சித்தாந்த நூல் பல செய்த பூரீ உமாபதி சிவத்தால் பாடப்பட்டது. புலவரின் சிறப்பும் நூற் சிறப்பும் கூறப்பட்ட தனிநூல் பெற்றவர் திருவள்ளு வரை அன்றி வேறு யாரையும் கூற இயலாது. அதுவே திருவள்ளுவ மாலே. சைவ நூல் புலவர்கள் பெரிதும் சேக்கிழார்க்கும் வணக்கப் பாடலைக் கூறி வணங்குவர். இச்சிறப்புப் புலவர்களுள் யார்க்கு உண்டு? அருள் நாத ஒலியில் எழுந்த மகாமந்திரங்களாக விளங்கும் திருமுறை களோடு இவரது நூலும் திருமுறைகளுள் ஒன்ருக விளங்கு கிறது என்ருல், இதனினும் வேறு சிறப்புயாது வேண்டும்? ஏழு திருமுறைகட்குப் பின் ஒவ்வொரு திருமுறைகளாகப் பதினென்முகிப் பின் பன்னிரண்டாகத் திருத்தொண்டர் புராணம் சேர்க்கப்பட்டபின், வேறு துரல்கள் திருமுறை